ஹாங்காங் எல்லைகள் கட்டுப்பாடின்றி திறப்பு

ஹாங்காங் எல்லைகள் கட்டுப்பாடின்றி திறப்பு

1 mins read
0a8b8b15-2ea0-479a-9284-e2dbb26d4a5d
-

ஹாங்­காங்: ஹாங்­காங்­கின் எல்­லை­கள் எந்­த­வித கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் இல்­லா­மல் நேற்று திறக்­கப்­பட்­டன. இத­னால் ஆயி­ரக் கணக்­கா­னப் பய­ணி­கள் சீனா­வுக்­கும் ஹாங்­காங்­கும் இடையே நேற்று பய­ணம் செய்­த­னர்.

இம்­மா­தம் 6ஆம் தேதியி லிருந்து ஹாங்­காங்­கு­ட­னான எல்­லை­கள் முழு­மை­யா­கத் திறக்­கப்­படும் என்று முன்­ன­தாக சீனா அறி­வித்­தி­ருந்­தது.

கட்­டாய கொவிட்-19 சோத னைகள், பய­ணி­க­ளுக்­கான வரம்­பு­கள் அகற்­றப்­படும் என்று அது கூறி­யி­ருந்­தது.

நேற்று நண்­ப­கல் வரை ஏறக்­கு­றைய 22,000 பய­ணி­கள் லோ வூ சோதனை நிலை­யத்­தைக் கடந்து சென்­ற­னர் என்று ஹாங்­காங் எம்­டி­ஆர் கார்ப்பரே­ஷன் அறிக்கை வாயி­லா­கத் தெரி­வித்­தது.

"ரயி­லி­லி­ருந்து இறங்கி எல்­லை­யைக் கடந்து சென்­றது சிலிர்ப்­பாக இருந்­தது. பழைய காலத்­திற்­குச் செல்­வ­து­போல இருந்­தது," என்று ஹாங்­காங்கி லிருந்து சீனா­வின் ஷென்­ஸெனுக்­குப் பய­ணம் மேற்­கொண்ட கிறிஸ்­டினா லி, 35, தெரி­வித் தார்.

இதற்­கி­டையே தேசி­யப் பாது­காப்பு தொடர்­பில் ஆகப்­பெ­ரிய வழக்கு விசா­ரணை நேற்று தொடங்­கி­யது.

அரசாங்­கத்தை கவிழ்க்க முயற்சி செய்­த­தாக 47 ஜன­நா­யக ஆத­ர­வா­ளர்­கள் குற்­றச்­சாட்டு களை எதிர்நோக்குகின்றனர்.

பிரபலங்கள், சட்ட கல்வி மான்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வழக்கில் சிக்கியிருக்கின்றனர்.

இவர்களுக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.