'தரக்குறைவாகப் பேசும் மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 1,000 ரிங்கிட் அபராதம்'

'தரக்குறைவாகப் பேசும் மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 1,000 ரிங்கிட் அபராதம்'

1 mins read
35d608e0-3cff-4aa8-9b87-5502cf738bf1
-

பெட்­டா­லிங் ஜெயா: நாடாளு மன்றத்­தில் தரக்­கு­றை­வா­கப் பேசும் உறுப்­பி­னர்­க­ளுக்கு ஆயி­ரம் ரிங்­கிட் (S$307) அப­ரா­தம் விதிக்­கப்­படும் என்று மலே­சிய நாடா­ளு­மன்ற கீழவை நாய­கர் ஜோஹாரி அப்­துல் அறி­வித்­துள்­ளார்.

"சில உறுப்­பி­னர்­கள் இன­வாதம், பாலி­யல் தொடர்­பாக தரக்­கு­றை­வா­கப் பேசு­கின்­ற­னர். சபா­நா­ய­கர், துணை சபா­நா­ய­கர், இதர நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை குறிவைத்து அவ­தூ­றா­கப் பேசும் சில நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் வெட்­க­மின்றி தகாத சொற்­க­ளைப் பயன்­ப­டுத்­து­கின்­ற­னர்.

"இத­னைக் கருத்­தில் கொண்டு சில நாடா­ளு­மன்ற சீர்­தி­ருத்­தங்­கள் கொண்டு வரப்­ப­டு கின்றன," என்று திரு ஜோஹாரி அப்­துல் சொன்னார்.

"நாடா­ளு­மன்­றத்­தில் உறுப்­ பினர்­க­ளின் நடத்­தை­யைக் கண்­கா­ணிக்க குழு ஒன்று அமைக்­கப்­படும்.

"அதன் வழி வழி­காட்டி நெறி­மு­றை­கள் உருவாக்கப்படும்," என்று அவர் குறிப்பிட்டார்.

"உறுப்­பி­னர்­க­ளுக்கு ஆயி­ரம் ரிங்­கிட் அப­ரா­தம் விதிக்­க ஏற்கெனவே (சலு­கை­கள், அதி­கா­ரங்­கள்) சட்­டம் 1952ல் உள்­ளது. ஆனால் இது ஒரு­போ­தும் பயன்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

"இந்­தச் சட்­டத்தை மீறு­வோரை ஆறு மாதத்­திற்கு இடை­நீக்­கம் செய்ய முடி­யும்.

"இருந்­தா­லும் இதற்கு முன்பு இருந்த நாடாளுமன்ற நாயகர்கள் இதனை அரி­தாகவே பயன்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­ற­னர்," என்று மலாய் நாளி­த­ழான பெரித்தா ஹரி­யா­னி­டம் அவர் கூறினார்.

இந்த விவ­கா­ரம் குறித்து மேலவை நாயகர் ரயிஸ் யதி­மு­டன் கலந்து ஆலோ­சிக்­கப்­பட்­ட­தா­க­வும் அவர் கூறி­னார்.