வெலிங்டன்: மிக மோசமான சூறாவளி இன்னும் சில நாள்களில் நியூசிலாந்தில் கரையைக் கடக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூறாவளிக்கு கேப்ரியேல் என்று பெயர் வைக்கப்
பட்டுள்ளது.
கேப்ரியேல் சூறாவளி காரணமாக அந்நாட்டின் ஆகப் பெரிய நகரமான ஆக்லாந்தில் கனமழை, வெள்ளம் ஏற்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
எனவே அதற்குத் தயாராகும்படி அந்நகர மக்களை நியூசிலாந்து அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
நியூசிலாந்தைப் பொறுத்த வரை, கடந்த 100 ஆண்டுகளில் இதுவே ஆக மோசமான சூறா
வளியாக இருக்கும் என்று அந்நாட்டு வானிலை மையம் முன்னுரைத்துள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆக்லாந்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கனமழை பெய்தது.
அதன் விளைவாக வெள்ளம், நிலச்சரிவு ஆகியவை ஏற்பட்டன. இவை நியூசிலாந்துக்குப் பெரும் பொருட்சேதத்தை ஏற்படுத்தின.
பொருட்சேதம் மட்டுமல்லாது உயிர்ச்சேதமும் ஏற்பட்டது. வெள்ளம், நிலச்சரிவு காரணமாக நான்கு பேர் மாண்டனர்.
இந்நிலையில், நியூசிலாந்தை நோக்கி விரைந்து வரும் கேப்ரியேல் சூறாவளியால் ஏற்படும் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த நியூசிலாந்து அரசாங்கத்துடன் இணைந்து அந்நாட்டு மக்களும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மீட்புப் பணியாளர்களும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக நியூசிலாந்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

