கோலாலம்பூர்: அண்மையில் அம்னோ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் மலேசிய சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் வானொலி அறிவிப்பாளராகக் களமிறங்க இருக்கிறார்.
ஹாட் எஃப்எம் எனும் வானொலி நிலையத்தில் திரு கைரி வானொலி அறிவிப்பாளராக இணைய இருப்்பதாகவும் இம்மாதம் 15ஆம் தேதியி
லிருந்து வாரநாள்களில் காலை 6 மணியிலிருந்து 10 மணி வரை நிகழ்ச்சிகளைப் படைப்பார் என்றும் மலேசிய ஊடக நிறுவனமான மீடியா பிரிமா ஆடியோ தெரிவித்தது.
முன்னாள் ரெம்பாவ் நாடாளு மன்ற உறுப்பினரான திரு கைரி, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற மலேசியப் பொதுத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள சுங்கை புலோ தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றார். கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறி திரு கைரியை அம்னோ கட்சி நீக்கியது. வானொலி அறிவிப்பாளராக திரு கைரி செயல்படுவதன் மூலம் மலேசிய வானொலித் துறை புதிய அத்தியாயத்துக்குள் நுழைவதாக மீடியா பிரிமா ஆடியோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நஸ்ரீ நூரான் தெரிவித்தார்.
இந்நிலையில், சிலாங்கூர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவதாகவும் அம்
மாநிலத்தின் முதல்வராகப் பதவி வகிக்க இலக்கு
கொண்டிருப்பதாகவும் திரு கைரி கடந்த திங்கட்கிழமையன்று தெரிவித்தார்.

