ஜகார்த்தா: இந்தோனீசியாவின் பாப்புவா மாநிலத்தில் நேற்று ரிக்டர் அளவில் 5.4 நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் குறைந்தது நான்கு பேர் மாண்டதாகவும் பல வீடுகளும் கட்டடங்களும் இடிந்து விழுந்ததாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். நிலநடுக்கம் காரணமாக பாப்புவாவின் பல பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டபோதும் சுனாமி அபாயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
நிலநடுக்கத்தை அடுத்து பல அதிர்வுகள் ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

