தோக்கியோ: ஜப்பானில் கடும் குளிரால் பல விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தலைநகர் தோக்கியோ, ஒக்காயாமா, ஹிரோஷிமா ஆகியவற்றின் விமான நிலையங்களில் ஜப்பானின் 'ஏஎன்ஏ' ஹோல்டிங்ஸ் நிறுவனம் 18 விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளது. சுமார் 2,500 பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் 32 விமானச் சேவைகளை ரத்து செய்தது. கிட்டத்தட்ட 3,600 பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சில விமானச் சேவைகள் ரத்தாகலாம் என்று எச்சரிக்கப்பட்டது.
ஜப்பானின் முக்கியத் தீவான ஹொன்ஷுவின் சில பகுதிகள் குளிரால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தோக்கியோவில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

