சிசுவும் தாயும் நான்கு நாள்களுக்குப் பிறகு மீட்பு

சிசுவும் தாயும் நான்கு நாள்களுக்குப் பிறகு மீட்பு

2 mins read
7302577f-f88e-4fa0-827c-d4b1d82d6b05
-

அதுன்­கியா: துருக்­கி­யின் நில­ந­டுக்க இடி­பா­டு­களில் இருந்து பிறந்து பத்து நாள்­களே ஆன பச்­சி­ளங்­கு­ழந்­தை­யை­யும் அதன் தாயை­யும் நான்கு நாள்­க­ளுக்­குப் பிறகு மீட்­புப் பணி­யா­ளர்­கள் காப்­பாற்­றி­யுள்­ள­னர்.

அந்­நாட்­டின் ஹத்தே மாநி­லத்­தில் காப்­பாற்­றப்­பட்ட அந்த ஆண் குழந்­தை­யை­யும் சோர்­வ­டைந்த நிலை­யில் சற்று சுய­நி­னை­வு­டன் இருந்த அதன் தாயை­யும் மீட்­புக் குழு­வி­னர் மருத்­து­வ­ம­னைக்கு அனுப்பி வைத்­த­னர்.

இதே போல், மற்ற பகு­தி­களில் இருந்து 70 வயது மூதாட்டி ஒரு­வ­ரும் 55 வயது பெண் ஒரு­வ­ரும் கிட்­டத்­தட்ட 122 மணி நேரத்­திற்­குப் பிறகு பத்­தி­ர­மாக மீட்­கப்­பட்­டுள்­ள­னர்.

துருக்கி, சிரி­யா­வில் சென்ற திங்­கட்­கி­ழமை ஏற்­பட்ட கடு­மை­யான நில­ந­டுக்­கத்­தில் மாண்டோர் எண்ணிக்கை 25,000ஐ எட்டு கிறது.

கட்­டட இடி­பா­டு­களில் சிக்­கி­யி­ருப்­ப­வர்­களை மீட்­கும் பணி முடுக்­கி­வி­டப்­பட்­டி­ருந்­தா­லும் மோச­மான வானிலை, உறைய வைக்­கும் குளிர், அடுத்­த­டுத்த நில அதிர்­வு­கள் ஆகி­யவை மீட்­புப் பணி­க­ளுக்கு இடை­யூ­றாக இருந்து வரு­கின்­றன.

ஐந்து நாள்­கள் ஆகி­விட்ட நிலை­யில், இடி­பா­டு­களில் சிக்­கி­ய­வர்­கள் உயர்­பி­ழைத்­தி­ருப்­ப­தற்­கான வாய்ப்­புக் குறைவு என்­றும் கூறப்­ப­டு­கிறது.

பாதிக்­கப்­பட்ட பகு­தி­களில் 31,000 பேர் மீட்­புப் பணி­யில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக துருக்­கி­யின் துணை அதி­பர் ஒக்டே சொன்­னார்.

நில­ந­டுக்­கத்­தால் வீடு­களை இழந்த 1.05 மில்­லி­யன் மக்­கள் தற்­கா­லிக புக­லி­டங்­களில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் கிட்­டத்­தட்ட 80,000 பேர் மருத்­துவ சிகிச்சை பெற்று வரு­வ­தா­க­வும் அவர் சொன்­னார்.

"ஓர் ஆண்­டிற்­குள் மக்­க­ளுக்கு வீடு­க­ளைக் கட்­டித் தந்து அவர்­கள் இயல்பு வாழ்க்­கைக்­குத் திரும்­பு­வதை உறுதி செய்­வதே எங்­க­ளின் முக்­கிய குறிக்­கோள்," என்று ஒக்டே கூறி­னார்.

இருப்­பி­னும் நில­ந­டுக்­கத்­தில் உயிர் பிழைத்­த­வர்­கள் தொடர்ந்து பீதி­யில் உறைந்­துள்­ள­னர். பாதிக்­கப்­பட்ட பகு­தி­களில் உண­ரப்­பட்ட 1,600க்கும் அதி­க­மான நில அதிர்­வு­கள் அவர்­களை அச்­சத்­தில் ஆழ்த்­தி­யுள்­ளது.

"இடிந்து போன கட்­ட­டங்­க­ளை­யும் உயி­ரற்ற உடல்­க­ளை­யும் பார்க்­கும்­போது, என் நிலைமை நாளை என்­ன­வாக இருக்­கும் என்­பதை என்­னால் நினைத்­துக்­கூட பார்க்க முடிய வில்லை," என்­றார் உயிர் தப்­பிய பெண் ஒரு­வர். தனது குடும்­பத்­தைச் சேர்ந்த 60 பேரை நில­ந­டுக்­கத்­தில் இழந்­து­விட்­ட­தா­க­வும் அவர் சொன்­னார்.