கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது, 97, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தாம் நிறுவிய பெஜுவாங் தானா ஆயர் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
அக்கட்சியின் தலைவராக இருக்கும் அவரது மகன் முக்ரிஸுடன் மகாதீருக்கு ஏற்பட்டுள்ள அரசியல் பிளவை இது காட்டுவதாக கருதப்படுகிறது.
மகாதீருடன் மேலும்
12 பேர் பெஜுவாங் கட்சியில் இருந்து விலகினர்.
கிரக்கான் தானா ஆயர் கூட்டணியில் தனது அரசியல் பயணம் தொடரும் என்றார் மகாதீர்.

