கோலாலம்பூர்: உணவுப் பொருள்களின் விலைவாசி உயர்வைச் சமாளிக்க குறைந்த வருமான குடும்பங்களுக்கு உதவும் வகையில் மலேசியாவில் உள்ள கிட்டத்தட்ட 15,000 உண வகங்கள் ஐந்து ரிங்கிட்டுக்கு (1.50 வெள்ளி) உணவளிக்கின்றன.
அரசாங்கத்தின் கருணை பட்டியல் எனும் இத்திட்டம் நோன்புப் பெருநாளுக்குப் பிறகு கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள பொது உயர்கல்வி நிறுவனங்களுக்கும் நீட்டிக்கப்படும்.
சாதாரண உணவகங்கள் முதல் பர்கர் கிங், சாட்டைம் மலேசியா போன்றவையும் இந்த திட்டத்தில் பங்கெடுத்துள்ளன.
பெரும்பாலான உணவகங்கள் சோறு, காய்கறிகள், மீன் அல்லது கோழிக்கறி ஆகியவற்றுடன் தண்ணீர் போத்தல்களைத் தருகின்றன. பர்கர் கிங்கில் கோழி அல்லது இறைச்சி பர்கர் ஐந்து ரிங்கிட்டிற்கு கிடைக்கும்.
பிப்ரவரி மாத கடைசி வரை இரண்டு விதமான பபல் டீ ஐந்து ரிங்கிட்டிற்கும் கிடைக்கும் என்று சாட்டைம் கூறியது.
கேஎஃப்சி, மெக்டோனால்ட்ஸ் ஆகியவற்றுடனும் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக அரசாங்கம் தெரிவித்தது.

