மின்நுழைவாயில்களைப் பயன்படுத்த அழைப்பு

2 mins read
ea20385e-a075-4bb6-9ccb-f70bf99c780c
-

ஜோகூர் பாரு: மலே­சி­யா­வின் ஜோகூர் மாநி­லத்­தில் உள்ள நில­வ­ழிச் சோத­னைச்­சா­வ­டி­களில் இருக்­கும் மின்­நுழைவா­யில்­

க­ளைப் பயன்­ப­டுத்­தும்­படி சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு மலே­சியா அழைப்பு விடுத்­துள்­ளது.

குறு­கிய கால விரைவு நட­

வ­டிக்­கைக் குழுத் திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­தி­ய­தி­லி­ருந்து ஜோகூர் பாலத்­தில் போக்­கு­

வ­ரத்து நெரி­சல் குறைந்­தி­ருப்­ப­தாக மலே­சி­யக் குடி­நு­ழைவு ஆணை­யத்­தின் தலைமை இயக்­கு­நர் கைருல் ஸாய்மி டாவூத் தெரி­வித்­தார்.

மின்நுழை­வா­யில்­க­ளைப் பயன்­ப­டுத்த சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு அனு­மதி வழங்­கப்­பட்­ட­தும் இதற்­குப் பங்­க­ளித்­தி­ருப்­ப­தாக அவர் கூறி­னார்.

இந்­நி­லை­யில், கூடு­தல் சிங்­கப்­பூ­ரர்­கள் மின்­நுழைவா­யில்­

க­ளைப் பயன்­ப­டுத்த வேண்­டும் என்று அவர் விருப்­பம் தெரி­வித்­தார். குறிப்­பாக, ஒரே நாளில் ஜோகூ­ருக்­குச் சென்று சிங்­கப்­பூர் திரும்­பும் பய­ணி­கள் இந்த மின்­நுழைவா­யில்­க­ளைப் பயன்­ப­டுத்த

ஊக்­கு­விக்­கப்­ப­டு­கின்­ற­னர்.

கடந்த மாதம் 20ஆம் தேதி­யி­லி­ருந்து மின்நுழை­வா­யில்­க­ளைப் பயன்­ப­டுத்த சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு அனு­மதி வழங்­கப்­பட்­டது முதல் ஏறத்­தாழ 16,000 சிங்­கப்­பூ­ரர்­கள் மட்­டுமே அவற்­றைப் பயன்­ப­டுத்தி தங்­கள் கடப்­பி­தழ்­களை ஸ்கேன் செய்­துள்­ள­னர். மின்­வா­யில்­களை 35,000 சிங்­கப்­பூ­ரர்­கள் பயன்­ப­டுத்­து­வர் என்று எதிர்­பார்த்­தோம். ஆனால் நாங்­கள் எதிர்­பார்த்­த­தை­விட இது­வரை மின்­நுழைவா­யில்­

க­ளைப் பயன்­ப­டுத்­திய சிங்­கப்­

பூ­ரர்­க­ளின் எண்­ணிக்கை மிக­வும் குறை­வாக உள்­ளது.

"மின்­நுழைவா­யில்­கள் குறித்து சிங்­கப்­பூர் பய­ணி­க­ளி­டையே விழிப்­பு­ணர்வை ஏற்

­ப­டுத்த அடுத்த வாரம் துண்­டுப்­பி­ர­சு­ரங்­கள் விநி­யோ­கிக்­கப்­படும். குறிப்­பாக, கடை­க­ளுக்­குச் சென்று பொருள்­களை வாங்­க­வும் பொழு­து­போக்­கிற்­காக ஒரே நாளில் ஜோகூர் வந்து செல்­லும் சிங்­கப்­பூ­ரர்க­ளுக்கு அவை தரப்­படும்," என்­றார் திரு கைரி.

ஜோகூர் சோத­னைச்­சா­வ­டி­களில் உள்ள மின்நுழைவா­யில்­|

க­ளைப் பயன்­ப­டுத்­தும் சிங்­கப்

­பூ­ரர்­கள் மின்­க­டப்­பி­தழ்­களை வைத்­தி­ருக்க வேண்­டும்.

அக்­க­டப்­பி­தழ்­கள் குறைந்­தது மூன்று மாதங்­க­ளுக்­குச்

செல்­லு­ப­டி­யா­ன­தாக இருக்க வேண்­டும்.

மின்நுழை­வா­யில்­களை முதல்­

மு­றை­யா­கப் பயன்­ப­டுத்­து­வோர் குடி­நு­ழைவு முனை­யத்­தில் தங்­கள் பயோ­மெட்­ரிக்சை சரிபார்த்து உறுதி செய்துகொள்ளவேண்டும் என்று மலேசிய குடிநுழைவு ஆணையம் கூறியது.