அன்வார் இப்ராகிமின் மகள் பதவி விலகினார்

அன்வார் இப்ராகிமின் மகள் பதவி விலகினார்

1 mins read
8baf4047-6ce6-42b1-812d-74efa18cb63f
-

புத்ரா ஜெயா: மலே­சி­யப் பிர­த­மர் அன்­வார் இப்­ரா­கிமின் பொரு­ளி­யல் ஆலோ­ச­கர் பத­வி­யி­

லி­ருந்து அவ­ரது மகள் நூருல் இஸா வில­கி­யுள்­ளார்.

அதற்­குப் பதி­லாக அவர் நிதி அமைச்­ச­ருக்கு ஆலோ­சனை வழங்கும் குழு­வின் இணைத் தலை­வ­ரா­கப் பொறுப்­பேற்­கி­றார்.

திரு அன்­வா­ரின் பொரு­ளி­யல் ஆலோ­ச­க­ராக திரு­வாட்டி நூருல் இஸா நிய­மிக்­கப்­பட்­ட­போது திறமைக்கு மதிப்­ப­ளிக்­கா­மல் சொந்­த­பந்­தங்­க­ளுக்­குப் பத­வி­களை அள்­ளித் தரும் அணு­கு­மு­றையை திரு அன்­வார் கடைப்­பி­டிப்­ப­தாக

அதி­ருப்­திக் குரல்­கள் எழுந்­தன.

கடந்த ஆண்டு நவம்­பர் மாதம் நடை­பெற்ற பொதுத் தேர்­த­லில் 42 வயது திரு­வாட்டி இஸா போட்­டி­யிட்­டுத் தோற்­றார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

திரு­வாட்டி இஸா தற்­போது தலைமை தாங்­கும் நிதி அமைச்சு ஆலோ­ச­னைக் குழு தொடர்­பாக இம்­மா­தம் 7ஆம் தேதி­யன்று பிர­த­மர் அன்­வார் அறி­வித்­தார்.

இக்­குழு மலே­சிய நிதி அமைச்­ச­ரு­டன் நேர­டி­யா­கத் தொடர்­பு­கொள்­ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.