மணிலா: தனது கடற்படைக் கப்பல் ஒன்றைக் குறிவைத்து சீனா லேசர் ஒளிக்கற்றையைப் பாய்ச்சியதாக பிலிப்பீன்ஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. அந்த ஒளிக்கற்றை ராணுவத் தரம் வாய்ந்தது.
இம்மாதம் ஆறாம் தேதியன்று மேற்கு பிலிப்பீன்ஸ் கடலில் (சம்பந்தப்பட்ட தென்சீனக் கடல் பகுதிக்கு பிலிப்பீன்ஸ் வைத்த பெயர்) உள்ள அயுங்கின் ஷோல் பகுதியில் பிலிப்பீன்சின் 'பிஆர்பி மலப்பாஸ்குவா' கடற்படைக் கப்பல் பணியில் ஈடுபட்டுக்கொண்ருந்தது.
அன்று 5205 என்ற எண்ணைக் கொண்ட சீனாவின் கடற்படைக் கப்பல் ஒன்று 'பிஆர்பி மலப்பாஸ்குவா'வைக் குறிவைத்து இரண்டு முறை பச்சை நிற லேசர் ஒளிக்கற்றையைப் பாய்ச்சியது. அதனால் சிறிது நேரத்திற்குக் கப்பலில் இருந்தோரின் கண் பார்வை மங்கிப்போனதென பிலிப்பீன்ஸ் கடற்படை தெரிவித்தது.
இச்செயலை பிலிப்பீன்ஸ் கடற்படைத் தளபதி அட்மிரல் அர்ட்டெமியோ அபு வன்மையாகக் கண்டித்துப் பேசினார்.

