புக்கெட் செல்வோருக்கு ஜெல்லிஃபிஷ் எச்சரிக்கை

1 mins read
24f1d8ee-39d5-4759-968b-f3d66052d0a5
-

புக்­கெட்: தாய்­லாந்­தின் பிர­பல சுற்­று­லாத்­த­ள­மான புக்­கெட் தீவுக்­குச் செல்­வோர் ஜெல்­லி­ஃபிஷ் நீரி­னங்­க­ளைக் கருத்­தில்­கொண்டு பாது­காப்­பாக இருக்­கு­மாறு எச்­ச­ரிக்­கப்­ப­டு­கின்­ற­னர். இத்­தீ­வின் 20க்கும் மேற்­பட்ட இடங்­களில் எச்­ச­ரிக்கை விடுக்கப்­பட்­டது.

புக்­கெட்­டின் மேற்­குப் பகு­தி­யில் உள்ள கட்டா கடற்­க­ரை­யில் ஜெல்­லி­ஃபிஷ் நீரி­னங்கள் தங்களைக் கடித்ததாக 30க்கும் அதி­க­மான சுற்­றுப்­ப­ய­ணி­கள் தெரி­வித்­தி­ருந்­த­னர். அதைத் தொடர்ந்து நேற்று இந்த எச்­சரிக்கை விடுக்­கப்­பட்­டது.

பத்­தோங், நய் யாங், சு­ரின் உள்­ளிட்ட புக்­கெட்­டின் 20க்கும் மேற்­பட்ட கடற்­க­ரைப் பகு­தி­களில் எச்­சரிக்கைக் குறிப்புகள் அமைக்­கப்­பட்­டன. வழிப்­பு­ணர்வை அதி­க­ரித்து முத­லு­தவி குறித்த தக­வல்­க­ளைத் தெரி­யப்­ப­டுத்த இந்­ந­ட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்டது.