லாஸ் ஏஞ்சலீஸ்: அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தின் மிச்சிகன் ஸ்டேட் பல்கலைக் கழகத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதலில் குறைந்தது மூவர் மாண்டனர், ஐவர் காயமடைந்தனர். காயமடைந்தோரில் சிலருக்கு உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய காயங்கள் ஏற்பட்டன.
சம்பவம் உள்ளூர் நேரப்படி நேற்று முன்தினம் இரவு நேர்ந்தது. துப்பாக்கிச்சூடு நிகழ்ந்தபோது பல மாணவர்கள் தப்பியோடினர். தாக்குதல்காரர் பல பாதுகாப்பு அதிகாரிகளைத் தாண்டிச் சென்றதாகவும் பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேறிய பிறகு தனது உயிரை மாய்த்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
43 வயது தாக்குதல்காரர் சிங்கப்பூர் நேரப்படி நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

