தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிறுவனின் மரணத்திற்குக் குவியும் அனுதாபங்கள்

1 mins read
f81f5871-23e5-4ac3-8445-fd9a47675cc3
-

பேங்காக்: தாய்­லாந்­துக் குகை­யிலி­ருந்து 2018ல் மீட்­கப்­பட்ட 12 சிறு­வர்­களில் ஒரு­வர் பிரிட்­ட­னில் மர­ண­ம­டைந்­தார்.

காற்­பந்­துக் குழு­வைச் சேர்ந்த அச்­சி­று­வர்­கள், வட­தாய்­லாந்­தில் உள்ள அந்­தக் குகை­யில் இரண்டு வாரங்­க­ளுக்கு மேலாக சிக்­கித் தவித்­த­னர். டோம் என்று அழைக்­கப்­படும் 17 வயது டுவாங்­பெச் புரோம்­தெப், அக்­கு­ழு­வின் தலை­வ­ராக இருந்­தார்.

இச்­சி­று­வ­னின் மர­ணத்­திற்­கான கார­ணம் தெரி­ய­வில்லை. காற்­பந்து உப­கா­ரச் சம்­ப­ளத்­தில் அவர் லெஸ்­ட­ருக்­குச் சென்­றி­ருந்­தார்.

டோமின் மர­ணத்தை உறு­திப்­ப­டுத்­திய லாப நோக்­க­மற்ற அமைப்­பான 'ஸிகோ' அற­நி­று­வனம், நேற்று வெளி­யிட்ட ஃபேஸ்புக் பதி­வில் அதன் அனு­தா­பங்­க­ளைத் தெரி­வித்­துக்­கொண்­டது.

2018 ஜூன் 23ஆம் தேதி, காற்­பந்­துப் பயிற்­சிக்­குப் பிறகு அச்­சி­று­வர்­கள் 'தாம் லுவாங்' குகை­யைச் சுற்­றிப் பார்த்­த­னர். அவர்­க­ளு­டைய உத­விப் பயிற்­று­ந­ரும் அப்­போது உட­னி­ருந்­தார்.

பரு­வ­மழை கார­ண­மாக அந்­தக் குகை மள­ம­ள­வென நிரம்­பி­ய­தில் வெளி­யேற முடி­யா­மல் அவர்­கள் 18 நாள்­கள் குகைக்­குள் சிக்­கித் தவித்­த­னர்.

பின்­னர் அச்­சி­று­வர்­களும் உத­விப் பயிற்­று­ந­ரும் மூன்று குழுக்­க­ளாக மீட்­கப்­பட்­ட­னர்.