சிட்னி: ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாநிலத்தில் சுரங்கம் ஒன்று இடிந்ததில் இரு ஊழியர்கள் மாண்டனர். முதலில் காணமற்போன அவ்விருவரைத் தேடும் பணிகள் 24 மணிநேரம் நீடித்தது.
இருவரும் எம்எம்ஜி நிறுவனத்தின் துத்தநாக சுரங்கத்தில் இருக்கும் பள்ளத்துக்குள் விழுந்து உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

