ஜி-20 சந்திப்புக்கு முன்பு வெடிகுண்டு செயலிழக்கப்பட்டது

ஜி-20 சந்திப்புக்கு முன்பு வெடிகுண்டு செயலிழக்கப்பட்டது

1 mins read
6c13432a-c330-4258-a402-a818b7579f3d
-

ஜகார்த்தா: இந்­தோ­னீ­சி­யா­வின் பாலி தீவில் ஜி-20 கூட்­ட­மைப்பு நாடு­க­ளின் தலை­வர்­கள் சந்­திக்­க­வி­ருந்­த­தற்கு முன்பு வெடி­குண்டு ஒன்று செய­லி­ழக்­கப்­பட்­டி­ருந்­த­தாக அர­சாங்­கத் தரப்­புத் தக­வல்­கள் தெரி­வித்­துள்­ளன. இந்­தோ­னீ­சி­யா­வின் பயங்­க­ர­வா­தத் தடுப்­புப் பிரிவு வெடி­குண்­டைச் செய­லி­ழக்­கச் செய்­தது.

உல­கத் தலை­வர்­கள் கலந்­து­கொண்ட ஜி-20 சந்­திப்பு சென்ற ஆண்டு நவம்­பர் மாத நடுப்­ப­கு­தி­யில் நடை­பெற்­றது. அதற்கு சுமார் ஒரு மாதத்­திற்கு முன்பு ஜாவா தீவில் உள்ள பான்­தன் மாநி­லத்­தில் இந்­தோ­னீ­சி­யா­வின் பயங்­க­ர­வாத எதிர்ப்­புப் படை­யின் டென்­சஸ் 88 பிரிவு சோதனை நடத்­தி­யது.

அப்­போது தயார்­நி­லை­யில் உள்ள வெடி­குண்டை அதி­கா­ரி­கள் செய­லி­ழக்­கச் செய்­த­னர். ஜி-20 சந்­திப்­பைக் குறி­வைத்து அந்த வெடி­குண்டு தயார்­செய்­யப்­பட்­ட­தென ஸ்ட்­ரெய்­டஸ் டைம்­சி­டம் தக­வல் தெரி­விக்­கப்­பட்­டது.

எனி­னும், சந்­திப்பு நடை­பெற்ற பகு­தி­யைச் சுற்றி பலத்த பாது­காப்பு இருந்­த­தால் பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு பாலித் தீவுக்­குள் நுழை­வது சவா­லாக இருந்­தி­ருக்­கும் என்று குறிப்பிடப்பட்டது.

"யாரா­வது பாலிக்­குள் நுழை­யும்­போது பிடி­பட்டு வெடி­குண்டு வெடித்­தி­ருந்­தால் சந்­திப்­பில் கலந்து­கொள்­ள­வி­ருந்­தோர் உட­ன­டி­யாக தீவை­விட்டு வெளி­யே­றி­யி­ருப்­பர்," என்று ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சுக்­குத் தக­வல் தெரி­வித்­த­வர் கூறினார்.

சென்ற ஆண்டு செப்­டம்­பர், அக்­டோ­பர் மாதங்­களில் டென்­சஸ் 88, மத்­திய ஜாவா, பான்தன் ஆகிய மாநி­லங்­களில் ஐந்து சோத­னை­களை நடத்­தி­யது. தாங்­கள் சேக­ரித்த உள­வுத் துறை தக­வல்­க­ளு­டன் பொது­மக்­க­ளி­ட­மி­ருந்து கிடைத்த துப்­பை­யும் கொண்டு பிரிவு சோத­னை­களை நடத்­தி­ய­தா­கத் தெரி­விக்­கப்­பட்டது.

இந்த விவ­கா­ரம் குறித்து கருத்து தெரி­விக்க ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் டென்­சஸ் 88ஐத் தொடர்பு­கொண்­டுள்­ளது.