பாப்புவா கொலைகள்: நான்கு ராணுவ வீரர்களுக்குச் சிறை

பாப்புவா கொலைகள்: நான்கு ராணுவ வீரர்களுக்குச் சிறை

1 mins read
67320192-4b2a-4e9d-adf2-deb3db3e77f8
இந்­தோ­னீ­சி­யா­வின் பாப்­புவா வட்­டா­ரத்­தில் பொது மக்­களில் நால்­வர் கொல்­லப்­பட்ட விவ­கா­ரத்­தின் தொடர்­பில் நான்கு ராணுவ வீரர்­க­ளுக்­குச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது. படம்: பிக்ஸாபே -

ஜகார்த்தா: இந்­தோ­னீ­சி­யா­வின் பாப்­புவா வட்­டா­ரத்­தில் பொது மக்­களில் நால்­வர் கொல்­லப்­பட்ட விவ­கா­ரத்­தின் தொடர்­பில் நான்கு ராணுவ வீரர்­க­ளுக்­குச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது. அந்த வட்­டா­ரத்­தில் உள்ள ராணுவ நீதி­மன்­றம் ஒன்று தீர்ப்பை வழங்­கி­யது.

குற்­ற­வா­ளி­களில் இரு­வருக்கு ஆயுள் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. ஒரு­வ­ருக்கு 20 ஆண்­டுச் சிறைத் தண்­டனை­யும் இன்­னொ­ரு­வ­ருக்கு 15 ஆண்­டுச் சிறைத் தண்­ட­னை­யும் விதிக்­கப்­பட்­டன.

நீதி­மன்ற ஆவ­ணங்­களில் இந்த விவ­ரங்கள் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தன.

மாண்ட நால்­வர் அந்த ராணுவ வீரர்­க­ளி­ட­மி­ருந்து ஆயு­தங்­களை வாங்க முயற்சி செய்­த­னர். அந்­தப் பரி­வர்த்­தனை எதிர்­பார்த்த வண்­ணம் செல்­லாத வேளை­யில் நால்­வ­ரும் கொடூ­ர­மான முறை­யில் கொல்­லப்­பட்­ட­னர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.