தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வேலை நிறுத்தம்; பயணிகள் கடும் அவதி

1 mins read
ae80c3d9-a66b-4c4e-8bfc-d17a8e12ddf3
-

பெர்­லின்: ஜெர்­ம­னி­யின் ஃபிராங்க்­ஃபர்ட், மியூ­னிக் விமான நிலை­யங்­கள் உட்­பட ஏழு விமான நிலை­யங்­களில் பணி­பு­ரி­யும் ஊழி­யர்­கள் நேற்று 24 மணி நேர வேலை நிறுத்­தப் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். இதன் விளை­வாக இந்த விமான நிலை­யங்­கள் முடங்­கின. வேலை நிறுத்­தப் போராட்­டம் கார­ண­மாக கிட்­டத்­தட்ட 300,000 பய­ணி­கள் கடும் அவ­திக்கு ஆளா­கி­னர்.

தொழிற்­சங்­கங்­களில் உறுப்

­பி­னர்­க­ளாக இருக்­கும் ஊழி­யர்­கள், கூடு­தல் சம்­ப­ளம் கேட்டு குரல் எழுப்­பி­யுள்­ள­னர். முன்­வைக்­கப்­படும் கோரிக்கை நிறை­வே­றா­வி­டில் வரும் கோடைக்­கா­லத்­தில் விமான நிலை­யம் முற்­றி­லும் முடங்­கி­வி­டும் என்று அவர்­கள் மிரட்­டல் விடுத்­துள்­ள­னர். கோடைக்­கா­லத்­தின்­போது ஜெர்­மனி மட்­டு­மன்றி ஐரோப்­பிய நாடு­க­ளி­லி­ருந்து பலர் குளிர் பிர­தே­சங்­க­ளுக்­குப் பய­ணம் மேற்­கொள்­வது வழக்­கம். நேற்று மியூ­னிக் பாது­காப்பு மாநாடு தொடங்­கி­யது. அதில் 40க்கும் மேற்­பட்ட உல­கத் தலை­வர்­களும் 60 அமைச்­சர்­களும் கலந்­து ­கொள்ள இரு­ப்ப­தாக எதிர்­பார்க்­கப்ப­டு­கிறது.

இப்­படி ஒரு சூழ­­லில் வேலை

நிறுத்­தப் போராட்­டத்தை நடத்­தி­னால் அதிக தாக்­கம் இருக்­கும் என்று கருதி ஊழி­யர்­கள் போர்க்­கொடி உயர்த்­தி­யுள்­ள­னர்.

ஜெர்­மன் விமான நிலை­யத்­தில் நிக­ழும் வேலை நிறுத்­தம் கார­ண­மாக மாநாட்­டில் கலந்­து­கொள்ள இருந்த ருமே­னிய வெளியுறவு அமைச்­சர் பய­ணம் செய்ய இருந்த விமா­னச் சேவை ரத்து செய்யப்பட்டது.