கராச்சி: பாகிஸ்தானில் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என்று தலிபான் அமைப்பு எச்சரித்துள்ளது.
பாகிஸ்தானின் கராச்சி நகரில் காவல்துறை தலைமை அலுவலகத்தில் புகுந்து தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 காவல்துறையினர் உள்பட 4 பேர் கொல்லப்பட்டனர்.
காவல்துறையினரின் சீருடையில் பயங்கர ஆயுதங்களுடன் 8 தீவிரவாதிகள் திடீரென உள்ளே புகுந்தனர்.
காவல்துறையினரைத் துப்பாக்கி முனையில் சரணடைய வைத்து மொத்த காவல் தலைமை அலுவலகத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயன்றனர்.
அப்போது நடத்தப்பட்ட எதிர் தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 3 தீவிரவாதிகள் தங்கள் உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க செய்து உடல் சிதறி பலியாகினர்.
துப்பாக்கிக் குண்டுகள் துளைத்ததில் காவல் அதிகாரிகள் 9 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். நீண்ட போராட்டத்துக்கு பிறகு காவல் தலைமை அலுவலகம் மீண்டும் காவல்துறையின் கட்டுப் பாட்டிற்குள் வந்தது.

