இம்ரான் கான் கைதாவதைத் தவிர்க்கும் நீதிமன்ற உத்தரவு

இம்ரான் கான் கைதாவதைத் தவிர்க்கும் நீதிமன்ற உத்தரவு

1 mins read
f489e493-2774-476c-a320-3a12e14422b5
-

லாகூர்: முன்­னாள் பாகிஸ்­தா­னி­யப் பிர­த­மர் இம்­ரான் கான் இப்போதைக்குக் கைது­செய்­யப்­படா­மல் இருக்க வகை­செய்­யும் உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. லாகூர் நகர நீதி­மன்­றம் ஒன்று திரு இம்ரானுக்குப் பாது­காப்­புப் பிணை உத்­த­ரவை அளித்­துள்ளது.

பாகிஸ்­தா­னின் பயங்­க­ர­வாத ஒழிப்­புச் சட்­டத்­தின்­கீழ் திரு இம்ரான்மீது குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டுள்­ளன. பாது­காப்­புப் பிணை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­ட­தைத் தொடர்ந்து அவர் இரண்டு வாரங்­க­ளுக்­குக் கைது செய்­யப்­ப­ட­மாட்­டார்.

சென்ற ஆண்டு நடை­பெற்ற நாடா­ளு­மன்ற வாக்­கெ­டுப்­பில் தோல்­வி­ய­டைந்த திரு கான் பிர­த­மர் பத­வி­யி­லி­ருந்து விலக நேரிட்­டது. அதை­ய­டுத்து அவர்­மீது குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டன.

தனது அர­சி­யல் கட்­சிக்கு சட்­ட­வி­ரோ­த­மாக நிதி திரட்­டி­யது, அர­சாங்க அதி­கா­ரி­களுக்கு எதி­ராக வன்­மு­றை­யைத் தூண்­டி­யது உள்­ளிட்­ட­வற்­றின் தொடர்­பில் குற்­றச்­சாட்டு­கள் சுமத்­தப்­பட்டன.