முகைதீன் கட்சியினர் இருவர்மீது ஊழல் குற்றச்சாட்டுகள்

முகைதீன் கட்சியினர் இருவர்மீது ஊழல் குற்றச்சாட்டுகள்

1 mins read
3490d50a-67ae-4ade-8b0f-af497c210d8e
-

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வின் முன்­னாள் பிர­த­மர் முகை­தீன் யாசி­னின் கட்­சி­யில் உள்ள இரு உறுப்­பி­னர்­கள்­மீது ஊழல், தவ­றான முறை­யில் பொருள்­க­ளையோ சேவை­க­ளையோ பெற முயற்சி செய்­வது ஆகி­ய­வற்­றின் தொடர்­பில் குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டுள்­ளன.

பெர்­சத்து கட்­சி­யின் தக­வல் பிரி­வுத் தலை­வர் வான் சைஃபுல் ஜான்­மீது இரண்டு குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டுள்­ளன. ஜானா விபாவா எனும் திட்­டத்­தின்­கீழ் நிறு­வ­னம் ஒன்­றி­ட­மி­ருந்து 6.9 மில்­லி­யன் ரிங்­கிட் (2.08 மில்­லி­யன் வெள்ளி) தொகை­யைப் பெற்­ற­தன் தொடர்­பில் ஒரு குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டது. ஜானா விபாவா திட்­டத்­தின்­கீழ் அதே நிறு­வ­னத்­தி­ட­மி­ருந்து சாலைத் திட்­டம் ஒன்­றுக்கு தவ­றான முறை­யில் 232 மில்­லி­யன் ரிங்­கிட் (69.9 மில்­லி­யன் வெள்ளி) பெற முயன்­ற­தாக மற்­றொரு குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டது. கொவிட்-19 கொள்­ளை­நோய்ப் பர­வல் காலத்­தில் கட்­டு­மா­னப் பணி­கள் உள்­ளிட்­ட­வற்றை மேற்­கொள்­ளும் பூமி­புத்­ரா­வி­ன­ருக்­குக் கைகொ­டுக்க ஜானா விபாவா வரை­யப்­பட்­டது.

திரு வான் சைஃபுல் மீதான குற்­றச்­சாட்­டு­கள் நிரூ­பிக்­கப்­பட்­டால் அவ­ருக்கு அதி­க­பட்­ச­மாக 20 ஆண்டு சிறைத் தண்­ட­னை­யும் அப­ரா­த­மும் விதிக்­கப்­ப­ட­லாம்.

செகாம்­புட் பகு­திக்­கான பெர்­சத்து கட்­சித் தலை­வர் அதாம் ராட்­லான் அதாம் முகம்­மது மீதும் குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டன. ஜானா விபா­வா­வு­டன் தொடர்­பு­டைய ஒரு திட்­டத்­துக்­கான மொத்த மதிப்­பில் 3.5லிருந்து ஏழு விழுக்­காடு வரை­யி­லான தொகையை 'எம்­ஐஇ இன்­ஃபி­ராஸ்ட்­ரக்­சர் ஆண்ட் எனர்ஜி' நிறு­வ­னத்­தின் நிர்­வாக இயக்­கு­ந­ரி­ட­மி­ருந்து தவ­றான முறை­யில் பெற முயன்­ற­தா­கக் குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டுள்­ளது. அதே நப­ரி­ட­மி­ருந்து திரு அதாம் 500,000 ரிங்­கிட்டைக் (150,636 வெள்ளி) கையூட்­டா­கப் பெற்­ற­தா­க­வும் சந்­தே­கிக்­கப்­ப­டு­கிறது.