லண்டன்: பிரிட்டனில் சென்ற மாதம் காணாமற்போன மாதின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டுக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
45 வயது நிக்கோலா புல்லி, சென்ற மாதம் 27ஆம் தேதியன்று காணாமற்போனார். இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகருக்கு சுமார் 72 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் செயின்ட் மைக்கல் எனும் கிராமத்துக்கு அருகே உள்ள ஆற்றில் அவரின் உடல் ஞாயிற்றுக்கிழமையன்று கண்டெடுக்கப்பட்டது.
திருவாட்டி புல்லி காணாமற்போனது பிரிட்டனில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. பெண்கள் காணாமற்போகும் விவகாரத்தில் காவல்துறையினர் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தனிப்பட்ட தகவல்களைக் கையாளும் முறை தொடர்பில் சர்ச்சை எழுந்தது. திருவாட்டி புல்லியின் இறுதி மாதவிடாய் பிரச்சினைகள் போன்ற அவரின் தனிப்பட்ட தகவல்களை உள்ளூர் காவல்துறையினர் வெளியிட்டிருந்தனர்.

