கோழி, முட்டை விலை: உச்சவரம்பை நீக்க எண்ணும் மலேசியா

1 mins read
5d1c3e9b-28a5-4e27-8327-b6e65fd75354
-

கோலா­லம்­பூர்: கோழி இறைச்சி, முட்டை ஆகி­ய­வற்­றுக்கு இருக்­கும் விலை உச்­ச­வ­ரம்பை வரும் ஜூன் மாதம் முதல் நீக்க மலே­சியா திட்­ட­மிட்டு வரு­கிறது. அவற்­றுக்­கான தட்­டுப்­பாட்­டைச் சமா­ளிக்க இந்­ந­ட­வ­டிக்­கையை எடுப்­பது குறித்து ஆலோ­சிக்­கப்­படு­கிறது.

மலே­சி­யா­வில் கோழி­க­ளுக்கு வழங்­கப்­படும் உணவு அதிக விலை­யில் இறக்­கு­மதி செய்­யப்­பட்டு வரு­கிறது. அதை எதிர்­கொள்ள உள்­ளூ­ரில் சோளம் வளர்க்­கும் முயற்­சி­யிலும் அந்­நாடு ஈடுபட்டுள்ளது.

விலை உச்­ச­வ­ரம்பு நீக்கப்­பட்டால் அது சில்­லறை வர்த்­தக விலை­களை எவ்­வாறு பாதிக்­கும் என்­ப­தைத் தமது அமைச்சு கண்­கா­ணிக்­கும் என்று மலே­சி­யா­வின் வேளாண், உண­வுப் பாது­காப்பு அமைச்­சர் முகம்­மது சாபு ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் கூறி­னார். இவ்வாண்டு மே மாதம் முதல் அந்த முயற்சி மேற்­கொள்­ளப்­ப­ட­லாம் என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

மலே­சி­யா­வில் தற்­போது சாதா­ரண கோழி இறைச்­சிக்­கான விலை ஒரு கிலோ­கி­ரா­முக்கு 9.40 ரிங்­கிட்­டைத் (2.80 வெள்ளி) தாண்­டக்­கூ­டாது. அதே வேளை­யில் ஓர் 'ஏ' தர கோழி முட்­டை­யின் விலை அதிக­பட்­ச­மாக 45 மலே­சிய காசாக இருக்­க­வேண்டும்.

விதி­மு­றை­களை மீறி தங்­களின் பண்ணை விலங்­கு­க­ளை­யும் முட்­டை­க­ளை­யும் அதிக விலைக்கு விற்­க­வேண்­டிய சூழ­லுக்­குத் தாங்­கள் தள்­ளப்­பட்­டுள்­ள­தாக சில பண்ணை உரி­மை­யா­ளர்­களும் சில்­லறை வர்த்­த­கர்­களும் தெரி­வித்­துள்­ள­னர். லாபத்தை அதி­க­ரிக்க சில பண்ணை உரி­மை­யா­ளர்­கள் அதி­கம் ஏற்­று­மதி செய்­ய­வும் விரும்பு­கின்­ற­னர். இத­னால் உள்­ளூ­ரில் விநி­யோ­கம் குறை­கிறது.