ஜகார்த்தா: இந்தோனீசியாவில் புதிதாக அமைக்கப்படவுள்ள தலைநகருக்கு மக்களையும் நிறுவனங்களையும் ஈர்க்க அந்நாட்டில் பல வரிச் சலுகைகளை வழங்கி வருகிறது. அவற்றின்கீ்ழ் 2035ஆம் ஆண்டுக்குள் முதலீடு செய்யும் வங்கிகளும் காப்புறுதி நிறுவனங்களும் 25 ஆண்டுகள் வரை வருமான வரி செலுத்தத் தேவையிருக்காது. 2045ஆம் ஆண்டுக்குள் முதலீடு செய்பவை 20 ஆண்டுகள் வரை வருமான வரிக் கழிவு பெறும்.
புதிய தலைநகராக விளங்கவிருக்கும் நுசாந்தாராவில் இயங்கும் வங்கிகளுக்கும் காப்புறுதி நிறுவனங்களுக்கும் இந்த வரிச் சலுகை பொருந்தும்.
இந்தோனீசியாவின் முதலீட்டு அமைச்சு வெளியிட்ட தகவல்களை்க கண்ட புளூம்பர்க் செய்தி நிறுவனம் இந்த விவரங்களைத் தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டுக்குள் அரசாங்க அதிகாரிகளை நுசாந்தாராவுக்கு இடம்மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.

