சீனா சுரங்க விபத்து: கூடும் மரண எண்ணிக்கை

சீனா சுரங்க விபத்து: கூடும் மரண எண்ணிக்கை

1 mins read
8c3a3233-06f3-4ab8-b65e-b177a53c34ef
-

பெய்­ஜிங்: சீனா­வில் நேற்று முன்­தி­னம் நிலக்­கரி சுரங்­கம் இடிந்து விழுந்­த­தில் ஆகக் கடைசி நில­வரப்­படி குறைந்­தது ஐவர் மாண்டு­விட்­ட­னர். 48 பேரைக் காண­வில்லை. சீன அர­சாங்­கத்­துக்­குச் சொந்­த­மான ஊட­கம் இத்­தகவலைத் தெரி­வித்­தது.

இச்­சம்­ப­வம் சீனா­வின் உள் மங்­கோ­லியா வட்­டா­ரத்­தில் நிகழ்ந்­தது.

சம்­பவ இடத்­தில் நேற்று முன்­தி­னம் பின்­னி­ர­வில் நேர்ந்த மோச­மான நிலச்­ச­ரி­வால் மீட்­புப் பணி­க­ளுக்கு இடை­யூறு ஏற்பட்டது. எனி­னும், அதற்­குப் பிறகு நேற்று மீட்­புப் பணி­கள் தொடர்ந்­த­தாக சிசி­டிவி ஊட­கம் குறிப்­பிட்­டது.

'சின்­ஜி­யாங் கோல் மைனிங்' நிலக்­கரி சுரங்க நிறு­வ­னம் நடத்­தும் அல்சா லீக் பகு­தி­யில் உள்ள இந்தச் சுரங்­கம் இடிந்ததைத் தொடர்ந்து 50 மீட்­டர் அக­லம், 80 மீட்­டர் உய­ரம் பரப்பளவில் இடி­பா­டு­கள் காணப்­பட்­டது.

"பிற்­ப­கல் 1.15 மணிக்கு நான் வேலை­யைத் தொடங்­கி­னேன். அப்­போது மலை­யி­லி­ருந்து கற்கள் விழு­வ­தைக் கண்­டேன்," என்று மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்ட நிலக்­க­ரிச் சுரங்க ஊழி­யர் ஒரு­வர் சிசி­டி­வி­ ஊடகத்திடம் கூறி­னார்.

"நிலைமை தொடர்ந்து மோச­ம­டை­வதை அறிந்­தேன். அனை­வ­ரை­யும் வெளி­யேற்ற ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்டு வந்­தன. ஆனால் அதற்­குள் மலை இடிந்து விழுந்­தது," என்­றும் அவர் குறிப்­பிட்­டார். 300 தீய­ணைப்­புப் படை­யினர், 60 தீய­ணைப்பு வாக­னங்­கள், ஆறு மோப்ப நாய்­கள் சம்­பவ இடத்­தில் நேற்று காணப்­பட்­ட­தாகத் தெரிவிக்கப்பட்டது. ஆகக் கடைசி நில­வ­ரப்­படி காய­முற்ற ஆறு பேர் மீட்கப்பட்டதாக சீனா­வின் சுகா­தார அமைச்சு கூறியது.