கம்போடியாவில் பறவைக் காய்ச்சலுக்கு ஆளான சிறுமி மரணம்

கம்போடியாவில் பறவைக் காய்ச்சலுக்கு ஆளான சிறுமி மரணம்

1 mins read
704b203e-5d39-49df-803b-e47f44f92aa6
-

நோம்­பென்: கம்­போ­டி­யா­வில் பல ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு ஒரு­வர் பற­வைக் காய்ச்­ச­லுக்கு ஆளாகி உயி­ரி­ழந்­தார். 11 வயது சிறுமி கிரு­மித்­தொற்­றுக்கு பலி­யா­னார்.

மாண்ட சிறுமி வசித்த கிரா­மத்­துக்கு அருகே மாண்­டு­கி­டந்த பற­வை­க­ளின் பரி­சோ­தனை முடி­வு­க­ளுக்­காக அதி­கா­ரி­கள் காத்திருக்கின்றனர்.

கடந்த ஈராண்­டு­க­ளாக உல­க­ள­வில் பல பற­வை­கள் மட்­டு­மின்றி இதர சில விலங்­கு­களும் பற­வைக் காய்ச்­ச­லால் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. எனி­னும், இக்­கி­ருமி மனி­தர்­க­ளி­டையே அதி­கம் பர­வு­வ­தற்­கான வாய்ப்­பு­கள் குறைவு என்று உல­கச் சுகா­தார நிறு­வ­னம் கூறி­யுள்­ளது.

பற­வைக் காய்ச்­ச­லுக்கு உள்­ளான விலங்­கு­க­ளு­டன் நேர­டித் தொடர்­புகொள்வோருக்கு மட்­டுமே கிரு­மித் தொற்று ஏற்­ப­டக்­கூ­டும் என்று குறிப்­பி­டப்­பட்­டது.