தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிலிப்பீன்ஸ் எரிமலை விமான விபத்து: நால்வர் பலி

1 mins read
1a16f8d0-5606-4636-a092-e53ecd984a2e
-

மணிலா: பிலிப்­பீன்­சில் அண்­மை­யில் விமானம் ஒன்று காணா­மற்­போ­யி­ருந்­தது. அந்த விமா­னம் விழுந்து நொறுங்­கி­ய­தை­யும் அதில் இருந்த நால்வரும் மாண்டு­விட்­ட­தை­யும் அதி­கா­ரி­கள் நேற்று உறு­திப்­ப­டுத்­தி­னர்.

விபத்து நிகழ்ந்­த­போது அந்த 'செஸ்னா 340' ரக விமா­னத்­தில் இரண்டு ஆஸ்­தி­ரே­லி­யர்­கள் உட்­பட நால்­வர் இருந்­த­னர். அல்­பாய் மாநி­லத்­தி­லி­ருந்து புறப்­பட்ட விமானம் சிறிது நேரம் கழித்து காணா­மற்­போ­னது.

எந்­நே­ர­மும் குமு­றக்­கூ­டிய மேயோன் எரி­மலை மேல் தேடல் பணி­கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. அதன் மேற்குப் பகுதியில் சிதைவுகள் கண்டறியப்பட்டன.

விமா­னம் விழுந்த பகு­தியை மீட்­புப் பணி­யாளர்­கள் நேற்று முன்­தி­னம் சென்­ற­டைந்­த­தா­க­வும் அதில் இருந்த யாரும் உயிர் பிழைக்­க­வில்லை என்­றும் விபத்து நிகழ்ந்த பகுதி இருக்­கும் காமா­லிக் வட்­டா­ரத்­தின் மேயர் தெரி­வித்­தார்.