ஆஸ்திரேலியாவில் மீண்டும் காட்டுத் தீ அபாயம்

ஆஸ்திரேலியாவில் மீண்டும் காட்டுத் தீ அபாயம்

1 mins read
2dc9a65c-b007-48e2-861d-56618ab15d10
-

சிட்னி: ஆஸ்­தி­ரே­லி­யா­வில் மூன்­றாண்­டு­க­ளாக தேவைக்­கும் அதி­க­மான மழை பொழிந்­துள்­ளது. அத­னால் அந்­நாட்­டில் பயிர்­கள் வளர்­வ­தற்கு நிலைமை பெரி­தும் சாத­க­மாக அமைந்­தது.

எனி­னும், இனி காட்­டுத் தீ மூள்­வ­தற்­கான அபா­யம் அதி­கம் இருப்­ப­தாக அறிக்கை ஒன்­றில் எச்­ச­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

பரு­வ­நி­லைக் குழு, 'எல்கா' எனும் பரு­வ­நிலை நட­வ­டிக்­கைக்­கான அவ­ச­ர­நிலை தலை­வர்­கள் குழு இரண்­டும் இணைந்து அறிக்­கையை வெளி­யிட்­டன.

2020ஆம் ஆண்டு தொடக்­கத்­தி­லி­ருந்து ஆஸ்­தி­ரே­லி­யா­வின் சில பகு­தி­களில் வர­லாறு காணாத அளவு மழை பொழிந்­துள்­ளது. லா நினா பரு­வ­நிலை நிகழ்­வால் கடு­மை­யான மழைக்­கா­லம் வழக்­கத்­துக்கு மாறாக மூவாண்­டு­க­ளுக்கு நீடித்­தது.

இப்­போது மழைக்­கா­லம் ஓய்ந்­து­விட்­ட­தா­க­வும் அதி­க­ரிக்­கும் வெப்­ப­நி­லை­யால் புல்­வெ­ளி­களும் வனப் பகு­தி­களும் காய்ந்­து­போ­வ­தா­க­வும் நேற்று முன்­தினம் வெளி­யான அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.