கோலாலம்பூர்: மலேசியாவில் உயர்நிலைப் பள்ளி வரலாற்றுத் தேர்வில் சிங்கப்பூரைப் பற்றிய கேள்விகள் இடம்பெற்றதை இரு பதின்ம வயதினர் கிண்டல் செய்வது பதிவான காணொளி டிக்டாக் சமூக ஊடகத்தில் பகிரப்பட்டது. அதன் தொடர்பில் ஹூலூ சிலாங்கூரைச் சேர்ந்த இரண்டு 18 வயது ஆடவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
ஓர் ஆசிரியர் புகார் தந்ததைத் தொடர்ந்து இருவரும் கைதாயினர். மன்னிப்புக் கேட்டும் ஒரு காணொளியை இவர்கள் பதிவு செய்தனர்.

