லாகூர்: பாகிஸ்தானில் செய்தி வாசிப்பாளராக வளர்ச்சி கண்ட முதல் திருநங்கை, அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டார். இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமையன்று இவரின் வீட்டுக்கு வெளியே நிகழ்ந்ததென உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.
தாக்குதலுக்கு ஆளான 26 வயது மார்வியா மாலிக் உயிர் தப்பினார். லாகூரில் உள்ள மருந்துக் கடை ஒன்றிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது துப்பாக்கி ஏந்திய நபர்கள் இவரை நோக்கிச் சுட்டனர்.
பாகிஸ்தானில் உள்ள திருநங்கைகளுக்குக் குரல் கொடுத்ததற்காக சில காலமாகவே தனக்கு பல மிரட்டல்கள் விடுக்கப்பட்டதென மாலிக் தெரிவித்தார். பாதுகாப்புக்காக இவர் இஸ்லாமாபாத் உள்ளிட்ட நகரங்களிலும் வசித்து வந்தார்.

