சிட்னி: பாப்புவா நியூ கினியில் ஆயுதம் ஏந்திய நபர்களால் பிணை பிடிக்கப்பட்டிருந்த ஆஸ்திரேலிய பேராசிரியர் ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார். கடத்தப்பட்டிருந்த மேலும் இருவரும் விடுவிக்கப்பட்டதாக ஆஸ்திரேலிய அரசாங்கத்துக்குச் சொந்தமான ஏபிசி ஊடகம் தெரிவித்தது.
அந்தப் பேராசிரியர் உட்பட சில தொல்பொருளியல் ஆய்வாளர்கள் சென்ற வாரம் ஞாயிற்றுக்கிழமையன்று கடத்தப்பட்டனர். பணம் பறிக்கும் நோக்குடன் இச்செயல் மேற்கொள்ளப்பட்டது.
ஆஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் வேலை செய்யும் அந்தப் பேராசிரியர், பாப்புவா நியூ கினியைச் சேர்ந்த இரண்டு பட்டதாரிகள், பாடத் திட்டங்களைச் சரிவரச் செயல்படுத்தும் பொறுப்பில் இருக்கும் ஓர் அதிகாரி ஆகியோர் கடத்தப்பட்டவர்கள். பாப்புவா நியூ கினியில் மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதியில் அவர்கள் பிணை பிடிக்கப்பட்டனர்.