புத்ராஜெயா: அம்னோவின் கட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் அக்கட்சியின் உதவித் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று மலேசிய வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஸாம்பிரி அப்துல் காதர் அறிவித்துள்ளார்.
"வெளியுறவு அமைச்சராகப் பதவி வகிக்கிறேன். எனக்கு ஏற்கெனவே நிறைய பொறுப்புகள் உள்ளன. தேசிய முன்னணியின் தலைமைச் செயலாளராகவும் இருக்கிறேன். கூட்டணியில் இருக்கும் கட்சிகள், ஒருமைப்பாட்டு அரசாங்கத்தில் இடம்பெறும் கட்சிகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்துவதே எனது இலக்கு. அதில் கவனம் செலுத்த விரும்புகிறேன்," என்று டாக்டர் ஸாம்பிரி தெரிவித்தார்.
அம்னோவின் கட்சித் தேர்தல் மார்ச் 18ஆம் தேதி வரை நடைபெறும். வருடாந்திர கிளைப் பேராளர்களின் கூட்டங்களும் மகளிர், இளையர் பிரிவுகளின் குழுத் தேர்தல்கள் நேற்று முன்தினம் நடந்து முடிந்தன.
அம்னோவின் மூன்று உதவித் தலைவர்களுக்கான தேர்தலும் உச்ச மன்றப் பதவிகளுக்கான தேர்தலும் மார்ச் 18ஆம் தேதியன்று நடைபெறும்.

