தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கோலாலம்பூர் விமான நிலையம்: தானியக்க குடிநுழைவு இயந்திரங்களை வெளிநாட்டவர்களும் பயன்படுத்தலாம்

2 mins read
b4df4171-6d11-4a62-9cb1-85bc56bdfec0
கோலா­லம்­பூர் அனைத்­து­லக விமான நிலை­யம் வழி­யாக மலே­சி­யா­வுக்­குள் நுழை­யும் வெளி­நாட்­ட­வர்­கள் கூடிய விரை­வில் அங்­கி­ருக்­கும் தானி­யக்க குடி­நு­ழைவு இயந்­தி­ரங்­க­ளைப் பயன்­ப­டுத்­த­லாம் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கோலா­லம்­பூர்: கோலா­லம்­பூர் அனைத்­து­லக விமான நிலை­யம் வழி­யாக மலே­சி­யா­வுக்­குள் நுழை­யும் வெளி­நாட்­ட­வர்­கள் கூடிய விரை­வில் அங்­கி­ருக்­கும் தானி­யக்க குடி­நு­ழைவு இயந்­தி­ரங்­க­ளைப் பயன்­ப­டுத்­த­லாம் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இது சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­கும் பொருந்­தும்.

'குறைந்த அபா­யம் உள்ள நாடு­கள்' இந்த வச­தி­யைப் பயன்­ப­டுத்­த­லாம் என்று மலே­சிய உள்­துறை அமைச்­சர் சயீ­ஃபு­தீன் நசுத்தி­யோன் தெரி­வித்­துள்­ளார்.

இந்­தப் புதிய அணு­கு­முறை கோலா­லம்­பூர் அனைத்­து­லக விமா­னத்­தில் உள்ள குடி­நு­ழைவு முனை­யங்­களில் ஏற்­படும் பய­ணி­கள் நெரி­ச­லைக் குறைக்க உத­வும் என்று நம்­பப்­ப­டு­கிறது.

அண்­மைய கால­மாக அந்த விமான நிலை­யத்­தின் குடி­

நு­ழைவு முனை­யங்­களில் பய­ணி­கள் நீண்ட வரி­சை­யில் பல மணி நேரத்­துக்­குக் காத்­தி­ருக்க வேண்­டி­யுள்­ளது.

இத­னால் அதி­ருப்­திக் குரல்­கள் எழுந்­துள்­ளன, புகார்­கள் குவிந்­துள்­ளன.

"இதற்கு முன்பு தானி­யக்க குடி­நு­ழைவு இயந்­தி­ரங்­களை மலே­சி­யர்­கள் மட்­டுமே பயன்

­ப­டுத்­த­லாம். ஆனால் அவற்­றைப் பயன்­ப­டுத்த வெளி­நாட்­ட­வர்­க­ளுக்­குக் கூடிய விரை­யில் அனு­மதி வழங்­கப்­படும். குறிப்­பாக, சிங்­கப்­பூர், புருணை, நியூ­சி­லாந்து போன்ற குறைந்த அபா­யம் உள்ள நாடு­கள் அல்­லது ஜி-7 நாடு­

க­ளி­லி­ருந்து வரும் பய­ணி­க­ளுக்கு இந்த வசதி வழங்­கப்­படும்.

"இந்த அணு­கு­முறை மூலம் குடி­நு­ழைவு முனை­யங்­களில் ஏற்­படும் பய­ணி­கள் நெரி­ச­லைக் குறைக்க இலக்கு கொண்­டுள்­ளோம். குறிப்­பாக, பய­ணி­கள் அதி­க­மா­னோர் மலே­சி­யா­வுக்கு வரும் கால­கட்­டங்­களில் பய­ணி­கள் நெரி­ச­லைக் குறைக்க விரும்­பு­கி­றோம்," என்று திரு சயீ­ஃபு­தீன் கூறி­னார்.

கடந்த ஆண்டு நவம்­பர் மாதத்­தில் நீண்­ட­கால குடி­

நு­ழைவு அனு­மதி உள்­ள­வர்­கள் தானி­யக்க குடி­நு­ழைவு முனை­யங்­க­ளைப் பயன்­ப­டுத்­த­லாம் என்று அறி­விக்­கப்­பட்­டது.

இவ்­வாண்டு ஜன­வரி மாதம் 20ஆம் தேதி­யி­லி­ருந்து சிங்­கப்­பூ­ரை­யும் மலே­சி­யா­வை­யும் இணைக்­கும் இரண்டு நில­வ­ழிச் சோத­னைச்­சா­வ­டி­களில் உள்ள மின் நுழை­வா­யில்­களை சிங்­கப்­பூ­ரர்­களும் பயன்­ப­டுத்­த­லாம் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

மின் நுழை­வா­யில்­க­ளைப் பயன்­ப­டுத்த விரும்­பும் சிங்­கப்­பூ­ரர்­கள் குறைந்­தது மூன்று மாதங்­கள் செல்­லுப்­ப­டி­யான மின் கடப்­பி­தழ்­களை வைத்­தி­ருக்க வேண்­டும்.