தோக்கியோ: அமெரிக்காவிட
மிருந்து ஜப்பான் 400 டோமஹாக் ஏவுகணைகளை வாங்கும் என்று ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்துள்ளார்.
வடகொரியா, சீனா போன்ற அண்டை நாடுகளிடமிருந்து நாளுக்கு நாள் மிரட்டல்கள் அதிகரித்து வரும் நிலையில் ஜப்பான் இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் கூறினார்.
ஏவுகணைகளை வாங்க ஜப்பான் 211.3 பில்லியன் யென் (S$2.09 பில்லியன்) ஒதுக்கியிருப்பதாக அந்நாட்டின் தற்காப்பு அமைச்சர் யசுகாசு ஹமாடா அண்மையில் தெரிவித்தார்.
ஒவ்வொரு ஆண்டிலும் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கு
வதைவிட ஒரே தடவையாக பல ஏவுகணைகளை வாங்க ஜப்பான் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.
சீனா, வடகொரியா ஆகிய அண்டை நாடுகள் விடுக்கும் மிரட்டல்களிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள ஜப்பான் அதன் தற்காப்பு ஆற்றலை பெரிதளவில் மேம்படுத்த இலக்கு கொண்டுள்ளது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஜப்பானின் ராணுவ மேம்பாட்டுக்குப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டின்படி அடிப்படை தற்காப்பில் மட்டுமே ஜப்பான் கவனம் செலுத்தலாம்.
ஆனால் சீனா விடுக்கும் மிரட்டல்களைக் காரணம் காட்டி கடந்த ஆண்டு அது தனது முக்கிய பாதுகாப்புக் கொள்கை
களைப் புதுப்பித்தது.
அதுமட்டுமல்லாது, தற்காப்புக்காக ஒதுக்கப்படும் நிதியை
இரட்டிப்பாக ஜப்பான் விருப்பம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

