ஹாங்காங்கில் கட்டாய முகக்கவசம் அகல்கிறது

ஹாங்காங்கில் கட்டாய முகக்கவசம் அகல்கிறது

2 mins read
dcd124e1-9b57-4fab-8ce6-427f9893831d
-

ஹாங்­காங்: உல­கி­லேயே ஹாங்­காங்­கில்­தான் மிக நீண்­ட­கா­ல­மாக முகக்­க­வ­சத்தை கட்­டா­ய­மாக அணி­யும் விதி­முறை அம­லில் இருந்­தது.

இப்­போது அந்த விதி­முறை அகற்­றப்­ப­டு­கிறது. இன்று மார்ச் 1ஆம் தேதி­யி­லி­ருந்து கட்­டாய முகக்­க­வச விதி­முறை கைவி­டப் படு­கிறது என்று அதன் தலைமை நிர்­வா­கி­யான ஜான் லீ நேற்று அறி­வித்­தார்.

ஹாங்­காங்­குக்கு சுற்­றுப் பய­ணி­களை ஈர்க்­க­வும் வழக்க நிலைக்­குத் திரும்­ப­வும் மூன்று ஆண்­டு­க­ளுக்கு மேலாக அம­லில் இருந்த முகக்­க­வச விதி­முறை கைவி­டப்­ப­டு­வ­தாக அவர் கூறி­னார்.

"இந்த முடி­வுக்கு இது­தான் நல்ல தரு­ணம். ஹாங்­காங் வழக்க நிலைக்­குத் திரும்­பு­வதை இது தெளி­வா­கக் காட்­டும்," என்று திரு லீ சொன்­னார்.

நோய் ­தொற்­றக்­கூ­டிய அபாய கர­மான இடங்­க­ளான மருத்­து­வ­மனை போன்ற இடங்­களில் ஊழி­யர்­கள், வரு­கை­யா­ளர்­கள் முகக்­க­வ­சம் அணி­வது பற்றி அவ்­வி­டங்­க­ளின் நிர்­வா­கமே முடிவு செய்­ய­லாம் என்று அவர் மேலும் தெரி­வித்­தார்.

மக்­காவ்­வி­லும் முகக்­க­வச விதி­முறை கைவி­டப்­ப­டு­கிறது. பொதுப் போக்­கு­வ­ரத்து, மருத்­து­வ­ம­னை­கள் உட்­பட குறிப்­பிட்ட இடங்­க­ளைத் தவிர பெரும்­பா­லான இடங்­களில் முகக்­க­வ­சம் அணிய வேண்­டி­ய­தில்லை என்று மக்­காவ் நிர்­வா­கம் கடந்த ஞாயிற்றுக்கி­ழமை கூறி­யது.

ஹாங்­காங், அண்­மை­யில் சுற்­றுப் பய­ணி­களை ஈர்ப்­ப­தற்­காக மாபெ­ரும் பிர­சா­ரத்­தைத் தொடங்­கி­யது. அதன் ஒரு பகு­தி­யாக இல­வச விமா­னச் சீட்­டு­கள் வழங்­கப்­படும் என்­றும் அறி­விக்­கப்­பட்­டது. இதை­ய­டுத்து முகக்­க­வச விதி­மு­றை­யும் விலக்­கிக்­கொள்­ளப்­ப­டு­கிறது.

ஹாங்­காங்­கில் இரண்டு வயது குழந்­தை­கள் உட்­பட பள்ளி களில் முக்­க­வ­சம் கட்­டா­ய­மாக்­கப்­பட்­டி­ருந்­தது.

இத­னால் கற்­றல் மற்­றும் குழந்தை வளர்ச்சி பாதிக்­கப்­படும் என்று ஆசி­ரி­யர்­களும் மாண­வர்­களும் கவ­லைப்­பட்­ட­னர்.

இந்த நிலை­யி­லும் கொவிட்-19 தொற்று இல்லை என்­பதை உறுதி செய்­வ­தற்­கான விரைவு ஆன்­டி­ஜென் பரி­சோ­த­னையை மாண­வர்­கள் தின­மும் செய்ய வேண்­டும்.

உயர்­நி­லைப் பள்ளி மாண­வர்­க­ளுக்கு மட்­டும் இதி­லி­ருந்து புதன்­கி­ழமை முதல் விலக்கு அளிக்­கப்­படும் என்று அதி­கா­ரி­கள் கடந்த வாரம் கூறி­யி­ருந்­த­னர்.

தொடக்­கப்­பள்ளி, மழ­லை­யர் பள்­ளி­களில் படிக்­கும் மாண­வர்­கள் கட்­டாய கொவிட்-19 பரி­சோ­தனை செய்­வது குறைந்­த­பட்­சம் மார்ச் 15ஆம் தேதி வரை நீடிக்­கும் என எதிர்­பார்க்­கப்­படுகிறது.