ஹாங்காங் பிரபலம் ஏபி சோயின் எஞ்சிய உடற்பாகங்களை காவல்துறை தேடுகிறது

ஹாங்காங் பிரபலம் ஏபி சோயின் எஞ்சிய உடற்பாகங்களை காவல்துறை தேடுகிறது

1 mins read
78d77ada-5a21-4a40-8be5-11b90ad3ed00
-
multi-img1 of 2

ஹாங்காங்: துண்டுதுண்டாக உடல் உறுப்பு களை வெட்டி கொடூரமாகக் கொல்லப்பட்ட ஹாங்காங் பிரபலமான ஏபி சோயின் எஞ்சிய உடற்பாகங்களை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

டா குவு லிங் வட்டாரத்தில் காணாமல் போன கைகளையும் இதர பாகங்களையும் நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் தேடி வருவதாக ஹாங்காங் காவல்துறை தெரி வித்தது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை டாய் போவில் உள்ள மூன்று மாடி வீட்டில் 'சூப்' காய்ச்சும் பானையில் செல்வி சோயின் மண்டையும் இதர மார்புப் பகுதிகளும் கண்டுபிடிக்கப் பட்டன. கடந்த வாரம் அவரது சில உடற் பாகங்கள் அதே வீட்டில் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து மீட்கப்பட்டன.

இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனை­வ­ரும் சோயின் முன்­னாள் கண­வர் அலெக்ஸ் குவோங்­கு­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள். குவோங்­கின் தந்­தை­யும் இதில் கைது செய்­யப்­பட்­டுள்­ளார். முக்­கிய மூளை­யா­கச் செயல்­பட்ட முன்­னாள் காவல்­துறை அதி­காரி ஒரு­வ­ரும் கைதா­கி­யுள்­ளார்.

சொத்­துப் பிரச்­சி­னை­யால் சோய் கொல்­லப்­பட்­டி­ருக்­க­லாம் என காவல்­துறை நம்­பு­கிறது.

குவாங், 65, அவ­ரது இரண்டு மகன்­கள் மீது கொலைக் குற்­றம் சாட்­டப்­பட்­டுள்­ளது.

அவ­ரது மனைவி மீது காவல்­துறை விசா­ர­ணை­யின்­போது சாட்­சி­யங்­களை கலைத்ததாகவும் நீதி­மன்­றத்­துக்கு தவறான வழி­யைக் காட்­டி­ய­தா­க­வும் குற்றம் சாட்­டப்­பட்­டுள்­ளது.