மலேசியாவில் காய்கறி விலை மீண்டும் அதிகரிக்கும் சூழல்

2 mins read
284ae30a-f284-4101-8062-88d996da6bed
-

பெட்­டா­லிங் ஜெயா: மலே­சி­யா­வில் கடந்த சில நாள்­க­ளாக தொடர்ந்து மழை பெய்வதால் காய்­கறி பற்றாக்­குறை ஏற்­ப­ட­லாம் என்று வாடிக்­கை­யா­ளர்­கள் எச்­ச­ரிக்­கப்­பட்­டுள்­ள­னர். கன­மழை, பலத்த காற்­றால் விளை­நி­லங்­கள் சேத­ம­டைந்­துள்­ளன என்று விவ­சா­யி­கள் கூறு­கின்­ற­னர்.

காய்­கறி விவ­சா­யி­கள் சங்­கக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் லிம் செர் குவீ, தென்தீப­கற்­பத்­தில் திடீ­ரென பெய்­துள்ள கன­ம­ழை­யால் ஒரு மில்­லி­யன் கிலோ காய்­கறி பயி­ரி­டப்­பட்ட விவ­சாய நிலங்­கள் சேத­ம­டைந்­துள்ளதாகவும் மில்­லி­யன் ரிங்­கிட் கணக்­கில் நட்­டம் ஏற்­பட்­டுள்­ளதாகவும் தெரி­வித்­தார்.

ஜோகூ­ரில் ஒரே இர­வில் வெள்­ளம் பெருகி பண்­ணை­கள் மூழ்­கி­விட்­ட­ன. ஆற்­றங்­க­ரை­யில் பொருத்­தப்­பட்­டி­ருந்த தண்­ணீர் சாத­னங்­கள் நீரில் அடித்­துச் செல்­லப்­பட்­ட­ன. இயந்­தி­ரங்­கள் நீரில் மூழ்­கி­விட்­ட­ன என்று அம்­மா­நில விவ­சா­யி­கள் கூறி­ய­தா­க­அவர் தெரி­வித்­தார்.

சாலை­கள் வெள்­ளத்­தில் மிதப்­ப­தால் வாக­னங்­கள் பண்­ணை­க­ளுக்­குச் செல்ல முடி­ய­வில்லை. இத­னால் ஒட்­டு­மொத்த விற்பனைச் சந்­தை­யில் காய்­கறி விநி­யோ­கம் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

விவ­சா­யி­க­ளுக்­கும் பூச்சி மருந்­து­க­ளை­யும் உரங்­க­ளை­யும் வாங்க முடி­யா­மல் பெரும் நட்­டம் ஏற்­பட்­டுள்­ளது," என்று புதன் ­கிழமை திரு லிம் குறிப்பிட்டார்.

ஜோகூ­ரில் உள்ள பத்து மாவட்­டங்­களும் வெள்­ளத்­தில் மூழ்­கி­யிருப்பதாக தகவல் வெளி யாகியுள்ளது. சுமார் 7,000 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 26,000க்கும் மேற்­பட்­டோர் 193 தற்­கா­லிக முகாம்­களில் தஞ்­சம் அடைந்­துள்­ள­னர்.

இந்த நிலை­யில் கேம­ரன் ஹைலண்ட் காய்­கறி உற்பத்தி யாளர் சங்­கத்­தின் செயலாளர் சாயே இ மோங், தொடர்ந்து இதே போன்று மழை நீடித்தால் காய்­கறி விலை அதிகரிக்கும் என்று எச்சரித்தார்.

காய்கறி விலையும் தேவைக்கு ஏற்ப ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. ஆனால் இறுதியில் விவசாயிகளுக்குத்தான் நட்டம் ஏற்படுகிறது. இதற்கு முன்னர் 2022 பிற்பகுதியிலும் 2023 முற் பகுதியிலும் அடிக்கடி மழை பெய்ததால் காய்கறி விலைகள் அதிகரித்ததாக திரு சாயே தெரிவித்தார்.