நோம் பென்: தேசத் துரோகத்தில் ஈடுபட்டதற்காக கம்போடியாவின் எதிர்கட்சித் தலைவரான கெம் சொக்காவிற்கு 27 ஆண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வரும் ஜூலை மாதம் கம்போடியாவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதை முன்னிட்டு திரு கெம் சொக்காவை அரசியலிலிருந்து முழுமையாக விலக்குவதற்காக அவருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதென அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
கம்போடியாவில் இருக்கும் வெளிநாட்டவர் உள்ளிட்டோருடன் இணைந்து திரு கெம் சொக்கா தேசத் துரோகச் செயல்களில் ஈடுபட்டதாகச் சொல்லப்படுகிறது. தீர்ப்பளிக்கப்பட்ட உடனேயே அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
கம்போடிய தேசிய மீட்புக் கட்சி எனும் அரசியல் கட்சியைத் தொடங்கியவர் திரு கெம் சொக்கா. அக்கட்சி முன்னதாகக் கலைக்கப்பட்டது.
திரு கெம் சொக்கா, கம்போடியத் தலைவர் ஹுன் சென்னிக் அரசியல் விரோதி. ஓர் ஆசிய நாட்டுக்கு ஆக அதிக காலம் தலைவராகப் பதவி வகிப்பவர் திரு ஹுன் சென்.