இந்தோனீசியா: தீயில் கருகி 17 பேர் மரணம்

இந்தோனீசியா: தீயில் கருகி 17 பேர் மரணம்

1 mins read
cee9157a-936f-41c7-9394-d1e24976990f
-

ஜகார்த்தா: இந்­தோ­னீ­சி­யா­வின் வடக்கு ஜகார்த்தா பகு­தி­யில் அரசு எரி­சக்தி நிறு­வ­ன­மான பெர்­ட­மினா மூலம் இயக்­கப்­படும் எரி­பொ­ருள் சேமிப்புக் கிடங்­கில் ஏற்­பட்ட தீ விபத்­தில் கிட்­டத்­தட்ட 17 பேர் உயி­ரி­ழந்­த­னர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

சிங்­கப்­பூர் நேரப்­படி நேற்று முன்­தி­னம் இரவு 9 மணி­ய­ள­வில் ஏற்­பட்ட இந்த விபத்­தின்­போது, தீயின் வேகம் அதி­க­ரித்­த­தால் அரு­கில் உள்ள குடி­யி­ருப்புப் பகு­தி­க­ளுக்­கும் தீ வேக­மாகப் பர­வி­யது. தக­வ­ல­றிந்து சம்­பவ இடத்­திற்கு விரைந்த 250க்கும் மேற்­பட்ட தீய­ணைப்பு வீரர்­கள் தீயை அணைக்­கும் பணி­யில் ஈடு­பட்­ட­னர்.

கன­ம­ழை­யால் எரி­பொ­ருள் கொண்டு செல்­லும் குழா­யில் உடைப்பு ஏற்­பட்டு, அதில் மின்­னல் தாக்­கி­ய­தில் தீ பிடித்­தி­ருக்­க­லாம் என முதற்­கட்ட தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது. இதைத் தொடர்ந்து அனைத்து எரிபொருள் கிடங்குகளையும் சோதனைக்கு உட்படுத்த இந்­தோ­னீ­சிய அதி­கா­ரி­கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

எரி­வாயு நிறு­வ­னத்­தின் தலைமை நிர்­வாகி நிக்கி வித்­யா­வதி, "இது­போன்ற நிகழ்வு மீண்­டும் நிக­ழா­மல் தடுப்­ப­தற்­குத் தேவை­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்," என்றார்.