தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசிய ஏடிஎம் கொள்ளை விவகாரத்தில் மூவர் கைது

1 mins read
18036e8a-bcac-46e8-9753-096433ae70df
-

ஷா ஆலாம்: கடந்த பிப்­ர­வரி 23ஆம் தேதி ஏடி­எம் இயந்­தி­ரத்தை உடைத்து கொள்­ளை­ய­டிக்­கப்­பட்ட விவ­கா­ரத்­தில் மூன்று தொழில்­நுட்­பர்­களை மலே­சிய காவல்­துறை­யி­னர் கைது செய்­துள்­ள­னர்.

அந்த சம்­ப­வத்­தில் 300,000 ரிங்­கிட்­டு­டன் கொள்­ளை­யர்­கள் தப்­பி­விட்­ட­னர்.

இது குறித்துப் பேசிய சிலாங்­கூர் காவல்­துறை தலை­வர் ஹுசேன் உமர் கான், சிலாங்­ கூ­ரில் மேரு, குவாங்­கில் நடத்­தப் ­பட்ட பல சோத­னை­க­ளுக்­குப் பிறகு மூவ­ரும் கைது செய்­யப்­பட்­ட­தாகத் தெரி­வித்­தார்.

விசா­ர­ணை­யில் பிப்­ர­வரி 23ஆம் தேதி நடை­பெற்ற ஏடி­எம் கொள்­ளை­யை­யும் கடந்த ஆண்டு பிப்­ர­வரி, டிசம்­ப­ரில் நடந்த சில சம்­ப­வங்­க­ளை­யும் அவர்­கள் ஒப்புக்­கொண்­ட­தாக அவர் கூறி­னார்.

"கும்­ப­லுக்கு குவாங்­கைச் சேர்ந்த 43 வயது நபர் மூளை­யா­கச் செயல்­பட்­டுள்­ளான். மேம்­ ப­டுத்­தப்­ப­டாத, குறிப்­பிட்ட வங்­கி ­க­ளின் ஏடி­எம் இயந்­தி­ரங்­களை சந்­தேக நபர்­கள் குறி வைத்தனர். இயந்­தி­ரத்­துக்­குள் புகையை செலுத்­தி, தீயிட்டு உடைத்தனர்," என்று அவர் மேலும் தெரி­வித்­தார்.

பிப்­ர­வரி 23ஆம் தேதி விடி­யற்­காலை நேரத்­தில் ஏடி­எம் இயந்­தி­ரத்­தி­லி­ருந்து பணத்தை மூவ­ரும் கொள்­ளை­ய­டித்­துள்­ள­னர்.

அந்த ஏடி­எம் இயந்­தி­ரத்­தில் உள்ள பணம், மை தெளிக்­கும் தொழில்­நுட்­பத்­தால் பாது­காக்­கப்­ப­டு­கிறது. ஏடி­எம் இயந்­தி­ரத்தை உடைக்­கும் முயற்சி நடை­பெற்­றால் பணத்­தின் மீது மை தானாக தெளிக்­கப்­படும்.

சந்­தேக நபர்­கள் பணத்தை கடற்­க­ரை­யில் சுத்­தப்­ப­டுத்­திக் கொண்­டி­ருந்­த­போது பிடி­பட்­ட­தாக ஆணை­யர் ஹுசேன் தெரி­வித்­துள்­ளார்.