தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜோகூர் டாக்சி ஓட்டுநரிடம் கொள்ளையடித்த பயணிகள்

1 mins read
5939fc11-bc87-4382-aa9d-237548b733fc
-

கோத்தா திங்கி: ஜோகூ­ரில் டாக்சி ஓட்­டு­ந­ரி­டம் இரண்டு பய­ணி­கள் கத்தி முனை­யில் கொள்­ளை­ய­டித்து உள்­ள­னர்.

சனிக்­கி­ழமை 3.50 மணி­ய­ள­வில் டாக்­சி­யில் ஏறிய முப்­பது வய­து­களில் இருந்த இரண்டு சந்­தேக நபர்­கள் கலாங் பாத்­தா­வி­லி­ருந்து பெங்­க­ராங் சென்­ற­தாக சம்­ப­வத்தை விவ­ரித்த கோத்தா திங்கி மாவட்ட காவல்­து­றைத் தலை­வர் ஹுசைன் ஸமோரோ தெரி­வித்­தார்.

"தாய் சான் கோங் கோயில் அருகே உள்ள இடத்தை அடைந்­த­தும் மடக்­கும் கத்­தியை எடுத்து ஓட்­டு­ந­ரின் இடுப்­பில் வைத்து மிரட்­டி­னர். கையி­லி­ருக்­கும் அனைத்­தை­யும் கொடுக்க வேண்­டும் என்று ஓட்­டு­ந­ரி­டம் அவர்­கள் கூறி­னர்.

இத­னால் எழு­பது வயது ஓட்­டு­நர் தன்­னி­ட­மி­ருந்த கைபேசி, கைக்­க­டி­கா­ரம், 400 ரிங்­கிட் ரொக்­கம் ஆகி­ய­வற்­றைக் கொடுத்­தார்.

இவற்றை வாங்­கிக்­கொண்டு சந்­தேக நபர்­கள் புத­ருக்­குள் ஓடி­விட்­ட­னர்." என்று திரு ஹுசைன் தெரி­வித்­தார்.

ஓட்­டு­நர் அளித்த புகா­ரின்­பே­ரில் வேக­மா­கச் செயல்­பட்ட கோத்தா திங்கி தலை­மை­ய­கக் காவல்­து­றை­யி­னர் நான்கு மணி நேரத்­தில் சம்­ப­வம் நடை­பெற்ற இடத்­துக்கு அருகே இரண்டு சந்­தேக நபர்­க­ளை­யும் கைது செய்து கொள்­ளை­ய­டிக்­கப்­பட்ட பொருள்­களை மீட்­ட­னர்.

சந்­தேக நபர்­களில் ஒரு­வர் தனது இட­து­பக்க மார்­பி­லும் வலது கையி­லும் சிலந்தி, பூரான் வடி­வத்­தில் பச்சை குத்­தி­யி­ருந்­த­தால் குற்­ற­வா­ளி­களை எளி­தில் அடை­யா­ளம் காண முடிந்­தது என கோத்தா திங்கி காவல்­து­றை­யி­னர் தெரி­வித்­த­னர்.