சர்ச்சைக்குரிய செங்காக்கு தீவுகளுக்கு அருகே படகு கவிழ்ந்தது, ஒருவர் மரணம்

1 mins read
ed466b6d-5020-446f-9898-cec619a3888f
-

தோக்­கியோ: ஜப்­பான்­வ­சம் இருக்­கும் செங்­காக்கு தீவு­க­ளுக்கு அருகே படகு ஒன்று கவிழ்ந்­த­தில் குறைந்­தது ஒரு­வர் மாண்­டு­விட்­ட­தா­க­வும் அறு­வ­ரைக் காண­வில்லை என்­றும் அந்­நாட்­டின் கரை­யோ­ரக் காவல்­படை தெரி­வித்­துள்­ளது. செங்­காக்கு தீவு­க­ளுக்கு சீனா­வும் சொந்­தம் கொண்­டாடி வரு­கிறது.

ஆகக் கடைசி நில­வ­ரப்­படி படகு குறிப்­பாக எந்த இடத்­தில் மூழ்­கி­யது என்­பது தெரி­ய­வில்லை. நேற்று முன்­தி­னம் செங்­காக்கு தீவு­க­ளின் வடக்­குப் பகு­திக்கு அருகே படகு மிதந்­து­கொண்­டி­ருந்­ததை ஜப்­பா­னிய கடற்­படை அதி­கா­ரி­கள் கண்­ட­னர்.

பட­கில் ஒரு தைவா­னி­ய­ரும் ஆறு இந்­தோ­னீ­சி­யர்­களும் இருந்­த­தாக கரை­யோ­ரக் காவல்படை­யின் பேச்­சா­ளர் ஒரு­வர் ஏஃப்பி செய்தி நிறு­வ­னத்­திடம் கூறி­னார். பட­கில் மாண்ட ஒரு­வ­ரின் உடல் இருந்­த­தாக வேறொரு பேச்­சா­ளர் குறிப்­பிட்­டார். மாண்­ட­வ­ரின் உட­லில் இருந்த அடை­யாள அட்­டையை வைத்­துப் பார்க்கும்­போது அவர் ஓர் இந்­தோ­னீ­சி­ய­ராக இருக்­க­லாம் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

நேற்று முன்­தி­னம் பிற்­ப­க­லில் படகு கவிழ்ந்­ததாகத் தக­வல் வந்திருக்கிறது. அதி­லி­ருந்து சற்றுக்­கா­வல் பணி­யில் ஈடு­படும் கப்­பல்­க­ளை­யும் ஹெலி­காப்­டர்­களை­யும் கொண்டு தேடல் பணி­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்றன.

கவிழ்ந்த படகு தைவா­ளைச் சேர்ந்­தது என்று ஜப்­பா­னிய ஊட­கங்­கள் கூறு­கின்­றன. எனி­னும், அது பற்­றிய தக­வல் அதி­கம் இல்லை என்று கரை­யோ­ரக் காவல்படை குறிப்­பிட்­டது. அது மீன்­பி­டிப் பட­காக இருக்­க­லாம் என்றும் சொல்லப்படுகிறது.