தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காற்றுத் தூய்மைக்கேட்டால் தாய்லாந்தில் 1.3 மி. பேர் பாதிப்பு

1 mins read
1c8691b6-8fe7-453b-9e7a-54159233a6bf
-

பேங்­காக்: தாய்­லாந்­தைப் பெரி­தும் பாதித்­துள்ள காற்­றுத் தூய்­மைக்­கேட்­டால் இவ்­வாண்டு இது­வரை மட்­டும் 1.32 மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மான மக்­கள் உடல்­ந­லம் குன்றி சிகிச்சை பெற்­ற­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. தாய்­லாந்­தின் நோய்த் தடுப்பு அமைப்பு இத்­த­க­வலை வெளி­யிட்­டது.

இவ்­வாண்­டின் முதல் ஐந்து நாள்­களில் மட்­டும் சுமார் 1.325 மில்லியன் பேர் காற்­றுத் தூய்­மைக்­கேடு தொடர்­பான நோய்­களுக்கு ஆளா­ன­தாக நோய்த் தடுப்பு அமைப்­பின் தலைமை இயக்­கு­ந­ரான டாக்­டர் ஒப்­பாஸ் கார்ன்­காவ்­வின்­பொங் கூறி­னார். நன், சயாங் மாய், சியாங் ராய், பிரே, பாயாவ், லம்­புன், லாம்­பாங், மே ஹோங் சொன், உட்­டா­ரா­டிட், சுக்­கோ­தாய், டாக், பிட்சா­னுக், பெட்சா­புன், நொன்­தா­புரி, பேங்­காக் ஆகி­யவை காற்­றுத் தூய்­மைக்­கேட்­டால் பெரி­தும் பாதிக்­கப்­பட்­டுள்ள பகு­தி­கள்.

பேங்­காக்­கின் அனைத்து 50 வட்­டா­ரங்­களும் இப்­பி­ரச்­சி­னையை எதிர்­நோக்­கு­வ­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

மேலும் 36 மாநி­லங்­க­ளி­லும் காற்­றுத் தூய்­மைக்­கேடு அபா­யக் கட்­டத்தை எட்­டி­யி­ருக்­கிறது. எனி­னும், இதர பகு­தி­க­ளைப் போல் அவை அதிக காலம் பாதிப்­புக்கு உள்­ளா­க­வில்லை என்று டாக்­டர் ஒப்­பாஸ் குறிப்­பிட்­டார்.

நேற்று முன்­தி­னம் முதல் வரும் செவ்­வாய்க்­கி­ழமை வரை பேங்­காக்­கி­லும் அதற்கு அரு­கில் இருக்­கும் மாநி­லங்­க­ளி­லும் நிலைமை மேம்­படும் என்று தாய்­லாந்­தின் காற்­றுத் தூய்­மைக்­கேட்­டுக் கட்­டுப்­பாட்டு அமைப்பு தெரி­வித்­தது. இருந்தாலும், வட தாய்­லாந்­தின் சில பகு­தி­களில் காற்­றுத் தூய்­மைக்கேடு மோச­ம­டை­யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோடை காலத்­தில் காற்­றுத் தூய்­மைக்­கேடு பிரச்சினை படிப்படியாக சீராகும்; ஆனால் இன்னும் சுமார் இரண்டு வாரங்களுக்கு அதிக மாற்றம் இருக்காது என்று டாக்டர் ஒப்பாஸ் சொன்னார்.