57 ஆண்டுகளுக்குப் பிறகு கொலை வழக்கு மறுவிசாரணை

57 ஆண்டுகளுக்குப் பிறகு கொலை வழக்கு மறுவிசாரணை

1 mins read
a4dd01e0-2dc5-4318-a636-9443ff1f4b21
-
Google News Preferred Icon

தோக்­கியோ: ஜப்­பா­னின் முன்­னாள் குத்­துச்­சண்டை வீர­ரான 87 வயது இவாவ் ஹக்­கா­மா­டா­வின் (படம்) கொலை வழக்கு 57 ஆண்டு­க­ளுக்­குப் பிறகு நீதி­மன்ற மறு­வி­சா­ர­ணைக்கு வரு­கிறது.

1968ஆம் ஆண்­டில் தனது முத­லாளி, அவ­ரின் மனைவி, இரண்டு பதின்ம வயது பிள்­ளை­கள் ஆகி­யோ­ரைக் கொன்­றதை ஹக்­கா­மாடா ஒப்­புக்­கொண்­டார். அதைத் தொடர்ந்து இவ­ருக்கு நீண்டகாலம் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்டது.

எனி­னும், காவல்­து­றை­யி­னர் கொடு­மைப்­ப­டுத்­தி­ய­தால்தான் குற்­றத்தை ஒப்­புக்­கொண்­ட­தாக ஹக்­கா­மாடா கூறி­வந்­தார்.

இவ­ரின் கொலை வழக்கு மறு­வி­சா­ர­ணைக்கு வர­வேண்­டும் என்று 2014ஆம் ஆண்­டில் வட்­டார நீதி­மன்­றம் ஒன்று தீர்ப்­ப­ளித்­தது. எனி­னும், தோக்­கியோ உயர்­நீ­தி­மன்­றம் அந்­தத் தீர்ப்பை மறுத்­தது. உயர்­நீ­தி­மன்­றம் அதன் முடிவை மறு­ப­ரி­சீ­லனை செய்­ய­வேண்­டும் என்று ஜப்­பா­னின் உச்­ச­நீ­தி­மன்­றம் 2020ஆம் ஆண்டு தீர்ப்­ப­ளித்­தது. அதை­யடுத்து உயர்­நீ­தி­மன்­றம் தனது தீர்ப்பை மாற்­றிக்­கொண்­டுள்­ளது.

ஹக்­கா­மாடா, உல­கில் கொலைக் குற்­றத்­துக்­காக ஆக அதிக காலம் சிறை­யில் இருந்­த­வர் எனக் கூறப்­பட்­ட­வர்.