தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாகிஸ்தானில் இரு காவலர்கள் சுட்டுக்கொலை

1 mins read
0820e951-ff0c-4bb0-9526-8ee8c531e814
-

பெஷா­வர்: பாகிஸ்­தா­னில் மக்­கள்­

தொ­கைக் கணக்­கெ­டுப்­பில் ஈடு­பட்­டோ­ருக்கு பாது­காப்பு அளித்து வந்த இரு காவல்­து­றை­யி­னர் சுட்­டுக்­கொல்­லப்­பட்­ட­னர். அந்­தப் படு­கொ­லைக்கு தலி­பான் இயக்­கம் பொறுப்­பேற்று உள்­ள­தாக காவல்­து­றை­யி­னர் நேற்று தெரி­வித்­த­னர்.

பாகிஸ்­தா­னில் மக்­கள்­தொகை மின்­னிலக்­கக் கணக்­கெ­டுப்பு இம்­மா­தம் 1ஆம் தேதி தொடங்­கி­யது. கணக்­கெ­டுப்­பில் ஈடு­பட்­டுள்ள 120,000க்கும் மேற்­பட்ட ஊழி­யர்­க­ளுக்கு துப்­பாக்கி ஏந்­திய காவ­லர்­கள் பாது­காப்பு அளித்து வரு­கின்­ற­னர்.

ஆஃப்கா­னிஸ்­தான் எல்­லைப் பகு­தி­யில் உள்ள இரு மாவட்­டங்­களில் காவலர் கள் தாக்கப்பட்டதில் ஒருவர் மாண்டார். பின்னர் வேறொரு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற கும்பல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு காவலர் உயிரி ழந்தார்; மூவர் காயமுற்றனர்.

"திங்­கட்­கி­ழமை இரு வெவ்­வேறு பாதை­களில் கணக்­கெ­டுப்­பில் ஈடு­பட்­டுக்­கொண்டு இருந்த ஊழி­யர்­க­ளுக்குப் பாது­காப்பு அளித்து வந்த காவ­லர்­களை துப்­பாக்­கிக்­கா­ரர்­கள் தாக்­கி­னர்," என்று டாங் மாவட்ட காவல்­துறை அதி­காரி ஃபாரூக் கான் தெரி­வித்­தார்.

இச்சம்பவம் நிகழ்ந்த அதே திங்கட் கிழமை மாலை போராளிகளுக்கும் தனக்கும் இடையில் நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் போராளி ஒருவர் கொல்லப் பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் கூறியது.