உக்ரேனில் ரஷ்ய ராணுவ வீரர்கள் பாலியல் கொடுமை புரிந்ததாக ஆவணங்களில் தகவல்

உக்ரேனில் ரஷ்ய ராணுவ வீரர்கள் பாலியல் கொடுமை புரிந்ததாக ஆவணங்களில் தகவல்

1 mins read
90bd0279-c764-4534-bf01-5e5a4fdf218c
-

கியவ்: உக்­ரேன் படை­யெ­டுப்­பில் ஈடு­பட்­டுள்ள ரஷ்ய ராணுவ வீரர்­கள் பாலி­யல் கொடு­மை­களில் ஈடு­பட்­ட­தாக குற்­றச்­சாட்­டு­கள் எழுந்­துள்­ளன.

இந்­தக் கொடு­மை­கள் ஓராண்­டுக்கு முன்­னர், படை­ எ­டுப்பு தொடங்­கிய நேரத்­தில் நிகழ்த்­தப்­பட்­ட­தாக உக்­ரே­னிய அர­சுத்­த­ரப்பு ஆவ­ணங்­கள் தெரி­விப்­ப­தாக ராய்ட்­டர்ஸ் செய்தி கூறி­யது.

அந்த ஆவ­ணங்­க­ளைத் தாம் பார்­வை­யிட்­ட­தா­க­வும் அவை 2022 மார்ச் மாதம் நிகழ்ந்த சம்­ப­வங்­கள் தொடர்­பா­னவை என்­றும் ராய்ட்­டர்ஸ் தெரி­வித்­தது.

கியவ் நக­ரைக் கைப்­பற்­றும் முயற்­சி­யில் ரஷ்ய ராணு­வம் தோற்­றுப் போனது. அதன் பின்­னர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கியவ் நக­ரின் அருகே உள்ள பிரோ­வரி மாவட்­டத்­திற்­குள் ரஷ்ய ராணு­வத்­தின் ஒரு படைப்­பி­ரி­வி­னர் நுழைந்­த­னர்.

வீடு­க­ளுக்­குள் புகுந்து கொள்­ளை­ய­டித்த இரு ராணுவ வீரர்­கள் அதன் பின்­னர் பாலி­யல் கொடு­மை­களில் ஈடு­பட்­ட­தாக ஆவ­ணங்­களில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன. அந்­தக் கொடு­மை­களை நேரில் கண்­ட­வர்­க­ளின் பேட்டி ஆவ­ணங்­களில் இடம்­பெற்றுள்­ளது.

குடி­போ­தை­யில் இருந்த ராணு­வத்­தி­னர், ஒரு வீட்­டுக்­குள் புகுந்து நான்கு வயது பெண் குழந்­தை­யை­யும் அவ­ரது தாயை­யும் வெளியே இழுத்து வந்­த­னர்.

அந்­தப் பெண்­ணின் கண­வரை அடித்து உதைத்து, துப்­பாக்கி முனை­யில் மண்­டி­யி­டச் செய்த வீரர்கள், அவ­ரின் கண்­முன்னே அவ­ரது மனை­வியை பாலி­யல் பலாத்­கா­ரம் செய்­த­னர்.

குழந்­தைக்­கும் பாலி­யல் தொல்லை கொடுத்­த­னர் என்று ஆவ­ணங்­கள் கூறின.