மணிலா: பீலிப்பீன்ஸில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின்போது இரு பதின்ம வயதுப் பிள்ளைகளைக் கொலை செய்த குற்றத்திற்காக காவல்துறை அதிகாரி ஒருவருக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜெஃப்ரி பெரஸ் எனப்படும் அவர், 2017ஆம் ஆண்டு அந்தப் பிள்ளைகளைக் கொன்றதாக இம்மாதம் 1ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட்ட விவரத்தை அண்மையில் ஏஎஃப்பி கண்டது. முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே ஆட்சியிலிருந்த ஆறாண்டு காலத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை தீவிரமாக நடைபெற்றது.
சிறுவர்களைக் கொன்ற அதிகாரிக்கு சிறை
1 mins read
-

