லாகூர்: பாகிஸ்தானின் முன்னைய பிரதமர் இம்ரான் கானைக் கைது செய்யும் நடவடிக்கையை அந்நாட்டுக் காவல்துறை நேற்று தள்ளி வைத்தது.
இதைத் தொடர்ந்து திரு இம்ரான் நேற்று மாலை கண்ணீர்ப் புகை முகக்கவசத்தை அணிந்துகொண்டு தமது இல்லத்தை விட்டு வெளியேறி, ஆதரவாளர்களிடம் பேசினார்.
லாகூர் நீதிமன்றம் காவல் துறைக்கு உத்தரவிட்டதால் கைது நடவடிக்கை இன்று வரை நிறுத்த வைக்கப்பட்டதாக மா நிலத்தின் தகவல் தொடர்பு அமைச்சர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
முன்னதாக, திரு இம்ரானைக் கைதுசெய்ய முயன்ற காவல் துறைக்கும் அவரது தெஹ்ரீக் இ- இன்சாஃப் கட்சியின் ஆதரவாளர்களுக்கும் இடையே கை கலப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களையும் செங்கற் களையும் வீசித் தாக்கினர்.
காவல்துறையினர் தண்ணீர் பீய்ச்சி அடித்து மக்களைக் கலைக்க முயன்றனர். பின்னர் திரு இம்ரானின் வீட்டுக்குள் நுழைய அதிகாரிகள் முயன்றனர்.
பிறகு லாகூரில் நேற்று பாகிஸ்தான் கிரிக்கெட் லீக் ஆட்டம் நடைபெறவிருந்ததால் காவல்துறை தனது நடவடிக்கையை நிறுத்துவதாக அதிகாரிகள் கூறினர். திரு இம்ரானின் இல்லம் அமைந்துள்ள ஸமான் பூங்கா பகுதியிலிருந்து காவல்துறை யினர் வெளியேறியதாகவும் சிலர் சாலைத் தடுப்புகளை விட்டுவிட்டுச் சென்றதாகவும் கூறப்பட்டது. அதனால் திரு இம்ரானின் ஆதரவாளர்களுக்கும் காவல் துறைக்கும் இடையே நடந்த கை கலப்பு நிறுத்தப்பட்டது. பாகிஸ்தானை உலுக்கிவரும் அரசியல் குழப்பம் ஓய்ந்தது.
திரு இம்ரான் பிரதமராக இருந்தபோது அரசாங்கத்துக்கு வழங்கப்பட்ட பரிசுப்பொருள்களை விற்றார் என்ற வழக்கில் இஸ்லாமாபாத் நீதிமன்றத்துக்கு வரத் தவறியதால் அவரைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் வரும் 18ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தம்மை முன்னிறுத்திக் கொள் வதாக திரு இம்ரான் உத்தரவாதம் தந்ததை அடுத்து கைது முயற்சி தள்ளிவைக்கப்பட்டது.

