சீனாவில் சளிக்காய்ச்சல் மருந்தை வாங்கிக் குவிக்கும் மக்கள்

சீனாவில் சளிக்காய்ச்சல் மருந்தை வாங்கிக் குவிக்கும் மக்கள்

1 mins read
9faa75d7-4d44-4e2f-80ed-837bb81d7f2a
-

பெய்­ஜிங்: சீனா­வில் பொது­மக்­கள் சளிக்காய்ச்ச லுக்கான கிரு­மித் தடுப்பு மருந்தை வாங்­கிக் குவித்து வரு­கின்­ற­னர். மின்­வர்த்­த­கத் தளங்­களில் அந்த மருந்­தின் விற்­பனை ஓராண்­டுக்கு முன்­பை­விட தற்­போது 100 மடங்குக்கு மேல் அதி­க­மா­கி­யுள்­ளது.

கொவிட்-19 தொற்று பாதிப்பு தணிந்­துள்ள நிலை­யில் சீனா­வில் காய்ச்­சல் வேக­மா­கப் பரவி வரு­கிறது. அத­னால் மக்­கள் அச்­சம் அ­டைந்­துள்­ள­னர்.

ஒசெல்­ட­மி­விர் எனும் பொதுப் பெய­ருள்ள அந்த மருந்தை மருத்­து­வர் எழு­தித் தந்­தால் வாங்க முடி­யும். சீனா­வின் டாவ்­பாவ், டிமால் இணைய வர்த்­த­கத் தளங்­களில் மார்ச்­ மாதத்தின் முதல் 13 நாளில் 533,100 ஒசெல்­ட­மி­விர் மாத்­தி­ரை­கள் விற்­கப்­பட்­ட­தாக லியன்­டான்லூ எனும் பகுப்­பாய்வு நிறு­வ­னம் கூறி­யது.

அன்­றாட விற்­பனை ஓராண்­டுக்கு முன்­பை­விட 129 மடங்கு கூடி­யது.

கொவிட்-19 தொற்­றின் பெரும்­பா­திப்பு மக்­க­ளின் மனங்­க­ளை­விட்டு அக­லா­த­தால் அவர்­கள் அச்­சப்­படும் வாய்ப்பு அதி­கம் என்று சுகா­தா­ரத்­துறை நிபு­ணர்­கள் கூறி­னர்.

மேலும், கிரு­மித் தடுப்பு மருந்­தின் இருப்பு குறை­வாக உள்­ளது. அத­னால் அவற்­றின் விலை­யும் கூடி­உள்­ளது. அதனால் மருந்து நிறுவனங்களின் பங்கு விலைகள் மளமளவென்று ஏறியுள்ளன.

சீனா­வில் கொவிட்-19 பர­வல் தடுப்பு நட­வ­டிக்­கை­கள் முடி­வுக்கு வந்­த­வு­டன், மக்­கள் வழக்­க­மான நட­வடிக்­கை­களில் ஈடு­ப­டத் தொடங்­கி­னர். அதை அடுத்து காய்ச்­சல் பர­வல் அதி­க­ரித்­தது. மருத்­து­வ­ ம­னை­கள் நிரம்பி வழிந்­த­தால் சிகிச்­சை­பெற மக்­கள் அல்­லா­டி­னர்.